சூலூர். பிப்.25- விசைத்தறி சங்கத்தலைவர் பழனிச் சாமி வயது மூப்பின் காரணமாக வெள்ளி யன்று உயிரிழந்த நிலையில், கணவரின் மர ணத்தால் அதீத சோகத்தில் இருந்த மனைவி யும் சனியன்று காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சோம னூர் சங்கத் தலைவர் பழனிச்சாமி (77). விசைத் தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவர். குறிப் பாக விசைத்தறி தொழிலாளர்களுக்கான இலவச மின்சாரத்திற்காக பல முறை பல் வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன் னெடுத்தவர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். அவரது உயிரிழப்பிற்கு விசைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி சங்கங்கள், விவசாய சங்கத்தினர் உட்பட பல்வேறு அர சியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பி னர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கணவர் இறந்த சோகத் தில் இருந்த அவரது மனைவி கருப்பாத்தா ளும், சனியன்று உயிரிழந்தார். இணைபிரி யாத தம்பதியினரின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். திருமணமாகி 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து, இணை பிரி யாத இந்த தம்பதியினரின் இறப்பு பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.