தருமபுரி, ஆக.31- அரூர் பேருந்து நிலையம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அப்பகுதியில் வேகத் தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங் கரை அருகே உள்ள கடப்பள்ளி கிரா மத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் வேன் ஒன்றில் ஊத்தங்கரையிலிருந்து தவிடு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு நாமக்கல் சென்று கொண்டிருந்தார். அரூர் பேருந்து நிலையம் வழியாக செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன், நின்று கொண்டிருந்த டாடா ஏஸ் வாகனம் மற்றும் அங்கி ருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாலையோரமிருந்த நகைக்கடை காவலாளி ராஜா என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. லாரி ஓட்டு நர் ராஜா மற்றும் அங்கிருந்த சர்தார் என்பவருக்கும் தலையில் காயங்கள் ஏற்பட்டு மூவரும், அரூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இதில் காவலாளி ராஜா மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து அரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வளைவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக் கள் வலியுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், வருவாய் கோட்டாட் சியர் வில்சன் ராஜசேகர், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன், நெடுஞ்சாலைதுறை உதவி கோட்டப் பொறியாளர் கார்த்தி கேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்விற்கு பின், தொடர் விபத்தை தடுக்கும் வகையில் காவல் துறை சார்பில் பேரிகாட் அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார். இதைத்தொ டர்ந்து, காவல்துறை சார்பில் பேரி காட் அமைக்கப்படும் என உறுதிய ளிக்கப்பட்டது.