சேலம், ஜன.30- ஔவையார் பெயரில் பல்கலைக்கழகம் துவங்க வேண்டும் என பெரியார் பல்கலைகழக தமிழ்த் துறை பாடதிட்ட வல்லுநர் குழு உறுப்பினர் தாரை அ. குமரவேலு கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய சமூக இலக்கி யப் பேரவையின் சார்பாக தமிழ் மூதாட்டி ஔவை யார் 21 ஆம் ஆண்டு விழா கொண்டா டப்பட்டது. உத்தமசோழபுரத்தில் உள்ள ஒளவையார் சிலை அருகில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ப.திரு முருகன் தலைமை வகித்தார். தமிழ் மூதாட்டி ஔவையார் சிலைக்குபட்டுச் சேலை அணி வித்து, மலர்க்கிரீடம் சூட்டி தமிழ்ச் செங் கோல் வழங்கி பேரவையின் மாநிலத் தலைவரும், பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பாடத்திட்ட வல்லுநர் குழு உறுப்பினருமான தாரை அ.குமரவேலு மரியதை செய்தார். அப்போது அவர் பேசுகையில், பெண் கள் இனத்திலே மகாகவிகள் தோன்றுவது அரிதாகவே இருந்தது. தமிழ் இனம் செய்த தவத்தால் ஔவையார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்ற பெண் புலவர்கள் பிறந்து புகழ் சேர்த்தனர். அதில் தலைசிறந்தவர் ஔவையார் ஆவார். “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற பாடலை எழுதிய ஔவையார், ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், மூதுரை நல்வழி ஆகிய நீதி நூல்களை இயற்றினார். கல்விக் கரையில் கற்பவர் நாள்சில, என்ற பாடலைப் பாடியவரும் ஔவையார் தான். எனவே ஔவையார் பெயரில் தமிழ கத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்தால் அது ஔவையாருக்கும், தமிழ் மொழிக்கும் செய்த பெரும் கடமையாகும், என்றார்.