உடுமலை, ஜன.12- உடுமலை உழவர் சந்தை யில் விவசாயிகளின் காய்கறி களை விற்பனை செய்யவி டாமல் மிரட்டிய சந்தையின் நிர்வாக அலுவலர் சீனிவாச னை வேளாண்மைத்துறை இடமாற்றம் செய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடுமலை உழவர் சந்தை யில் விவசாயிகளை பழி வாங்கும் நோக்கில் காய்கறி களை விற்பனை செய்யவிடாமல் அடை யாள அட்டைகளை பறித்து சந்தையை விட்டு வெளியேற்றுதல், வியாபாரிகள் மற்றும் வெளிநபர்களுக்கு உழவர் சந்தையில் கடை கள் வைக்க அனுமதி வழங்கியது உட்பட பல்வேறு குளறுபடிகளில் நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஈடுபட்டார். இவரின் இந்த போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகரக்குழு சார்பில் போராட் டம் அறிவித்து சந்தையின் முன்பு தட்டி வைக் கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கட்சி யின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத் தினார்கள். இதன் படி உடுமலை உழவர் சந் தையின் நிர்வாக அலுவலர் இடமாற்றம் செய் யப்பட்டு உள்ளார்.