எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிரம்மான்டமான கண்டன பொதுக்கூட்டம் வெள்ளியன்று (இன்று) கோவை, சிவானந்தா காலனியில் நடைபெற உள்ளது. திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, அதற்கான பணிகளை நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், அன்பகம் கலை, முன்னாள் மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.