சேலம், ஜன.29- சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற பிருந்தா தேவியின், முதல் ஆய்வே ரத்து செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தின் ஆட்சியராக பிருந்தா தேவி திங்களன்று காலை பொறுப் பேற்றுக் கொண்டார் அதனைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம்பாளையம் பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவுத்துறை உற்பத்தியா ளர்கள் விற்பனை சங்க நியாய விலைக்கடை யில் ஆய்வு செய்ய உள்ளதாக செய்தியா ளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சிய ரின் வருகையால் நியாய விலை பொருட் களை வாங்க வந்த பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் வரிசையில் காத்துக்கொண் டிருந்தனர். நீண்ட நேரமாகியும் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகை தரவில்லை. இறுதியாக ஆட்சியரின் ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வா கத்தினர் அறிவித்தனர். மேலும், மாவட்ட ஆட் சியர் ஆய்வு நடைபெறும் என்று மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரால் அனுப்பப் பட்ட குறுஞ்செய்தியும் வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கப்பட்டது. எந்த காரணத்தை யும் சொல்லாமலேயே ஆட்சியரின் ஆய்வு ரத்து செய்யப்பட்டது அப்பகுதியினர் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.