சேலம், ஜன.3- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியு றுத்தி, சேலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தி னர் கருப்புப்பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள பணி நெருக்கடியை அரசு நிர்வாகம் கண்டறிந்து, காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் கருப்புப்பட்டை அணிந்து பணி செய்யும் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) மற்றும் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகங்க ளில் வளர்ச்சித்துறை ஊழியர்கள் கருப்புப்பட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதேபோன்று, சேலம் மாவட்ட ஊராட்சி, அயோத்தியாபட்டினம், ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், கெங்க வல்லி, ஏற்காடு, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, நங்கவள்ளி உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் கருப்புப்பட்டை அணிந்து பணியாளர்கள் பணி செய்தனர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ந.திருவேரங்கன், மாவட்டத் தலைவர் செந்தில், செயலா ளர் ஜான் ஆஸ்டின், பொருளாளர் வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.