districts

ரயில்வே நிர்வாகம் நிறுத்தப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும்

கோவை,பிப். 27- ரயில் கட்டண குறைப்பு என்பது  மட்டுமல்ல, ரயிலில் பயணம் செய் யும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திற னாளிகள் ஆகியோருக்கு கொரோனா தொற்றுக்கு முன்பு வழங்கப்பட்ட அனைத்து சலுகைக ளையும் வழங்க வேண்டும் என  கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி யுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு  கொரோனா பரவல் காலத்தின் போது சாதாரண பயணிகள் ரயில்  எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப் பட்டு கட்டணம் உயர்த்தப்பட்டது. சாதாரண ரயிலில் பயணித்தாலும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்ட ணம் வசூலிக்கப்பட்டது. மேலும், ரயில் பயணிகளின் பல்வேறு உரி மைகள் பறிக்கப்பட்டது. தற் போது, பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்களை கொண்ட 200 கிலோ  மீட்டருக்கு குறைவான தூரத்திற்கு  இயக்கப்படும் ரயில்களில் கட்ட ணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக்குறிப்பு உடனடியாக அம லுக்கு வந்துள்ளதால் கோவை - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் 30 ரூபாயாக இருந்த ரயில் கட்ட ணம் 10 ரூபாயாக ஆக குறைந்துள் ளது.  இதுகுறித்து கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்  கூறுகையில், ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். மூத்த குடிமக் கள் உள்ளிட்டோருக்கு இதற்கு முன்பு வழங்கப்பட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகி றேன். இதேபோன்று பல்வேறு  அமைப்புகள் இதற்கான போராட் டங்களை முன்னெடுத்துள்ளது. தற் போது ரயிலில் மீண்டும் பழைய கட் டணம் வசூலிக்கப்படுகிறது என்பது  வரவேற்கத்தக்கது. எனினும் நாடா ளுமன்ற தேர்தலுக்காக இந்த கட் டண குறைப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருக்கலாம் என்கிற  சந்தேகமும் எழுகிறது. எங்களைப் பொருத்தவரையில் இந்த ரயில் கட் டண குறைப்பு மட்டும் போதாது, கோவை மாவட்டத்தை பொருத்த வரை ரயில்வே துறையில் ஏராள மான கோரிக்கைகள் நிலுவை யில் உள்ளது. இரவு நேர பெங்க ளூர் ரயில் சேவை உள்ளிட்டவை கள் இன்றளவும் ரயில்வே நிர்வா கத்தின் பாரா முகத்துடன் நிலுவை யில் இருந்து வருகின்றன. பழைய படி சிங்காநல்லூர், பீளமேடு உள் ளிட்ட ரயில் நிலையங்களில் பய ணிகள் ரயில்கள் நின்று செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டும். அதே போல மாற்றுத்திறனாளிகள் மற் றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப் பட்டு வந்த சலுகைகளை மீண்டும்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பது தான் என்றார்.