தாராபுரம், ஜூலை 7- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிய அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக திறத்து வைத்தார். தாராபுரம் ஐந்துமுனை சந்திப்பில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இக்கல்லூரி செயல்படும். இந்த வளாகத்தில் கல்லூரி திறப்பு விழா வியாழ னன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக கல்லூரியைத் திறத்து வைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல் வராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண் டலத் தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் கு. புஸ்பலதா, தாராபுரம் நகர மன்றத்தலைவர் கு.பாப்பு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எஸ். வி.செந்தில்குமார், காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர். ரா. சிவசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.