districts

img

நாடே பாராட்டும் நான் முதல்வன் திட்டம்

கோவை, டிச. 18. தமிழக அரசு செயல்படுத்தி வரும் நான் முதல்வன் திட்டம் இந்தியாவே பாராட்டும் ஒரு திட்ட மாக உள்ளதாக கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின் பெருமிதத்தோடு தெரிவித் தார். கோவையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் துவக்க விழா, தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின், உயர் கல்வித்துறை அமைச் சர் கோவி செழியன் மற்றும் உயர்  கல்வித்துறை அதிகாரிகள் பங் கேற்றனர். இதில், நான் முதல்வன்  திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத் தில் 29 அரசு பொறியியல் கல்லூரி களில் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.  இத்திட்டத்தை துவக்கி வைத்து  துணை முதல்வர் உதயநிதி ஸ்டா லின் பேசுகையில், தமிழக முதல் வர் சட்டப்பேரவையில் அறிவித்த படி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  ரூ.31 கோடி மதிப்பீட்டில், 29 அரசு  பொறியியல் கல்லூரிகளில் திறன்  மேம்பாட்டு மையம் துவக்கபடுகின் றது. இந்த 29 மையங்களும் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்ப தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. மேலும் 6 அரசு பாலி டெக்குகளில் ஸ்மார்ட் டெக் னாலஜி சென்டர்களையும் இன்று துவங்கி வைக்கின்றோம். கோவை மாணவர்கள் உற்சாகமானவர்கள், உறுதியானவர்கள். கோவை மாண வர்கள் படிப்பதுடன், 4 பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என நினைப்பவர்கள். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பல பார்மூலாக்கள் இருக்கும், அது போல ஒட்டுமொத்த மக்களின் பிரச் சினைகளை தீர்க்கும் பார்மூலா தான் திராவிட மாடல். தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கியது திமுக. நான் முதல் வன் திட்டத்தை இந்தியாவே பாராட்டுகின்றது. டெல்லியில் நடந்த ஐஏஎஸ் அதிகாரிகள் கூட் டத்தில் நான் முதல்வன் திட்டத்தை  இந்தியாவில் உள்ள ஐஏஎஸ் அதி காரிகள் பாராட்டியுள்ளனர். இது வரை 30 லட்சம் பேர் பயன் அடைந் துள்ளனர். 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. திறன் மையத்தில்  தேர்வானவர்கள் தினம் ஒரு புது  திறனை வளர்த்து கொள்ள முயற்சிக்க வேண்டும், அப்டேட் டாக இருக்க வேண்டும். திறன் பயிற்சி மையத்தை மாணவர்கள் யார் வேண்டுமானாலும் அணுக லாம் என்றார்.  இந்நிகழ்வில், அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்  பாடி, மேயர் ஆர். ரங்கநாயகி, மாந கராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் கணபதி ராஜ் குமார் எம்பி உள்ளிட்ட திரளானோர்  பங்கேற்றனர்.