districts

img

நாமக்கல் புத்தக திருவிழா: இரண்டு நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு

நாமக்கல், மார்ச் 9- நாமக்கல் புத்தக திருவிழா இரண்டு  நாட்களுக்கு நீட்டிப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள் ளார். நாமக்கல் வடக்கு, நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த பிப்.28 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி (இன்று) வரை புத்தகத் திருவிழா  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந் தது. 80 அரங்குகள், 20 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந் தைகளுக்கான பொழுதுபோக்கு அம் சங்கள், உணவுத் திருவிழா, கலை  நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சி யகம், தமிழ்நாடு அரசின் சாதனை  விளக்க புகைப்பட கண்காட்சி உள் ளிட்ட பல்வேறு அம்சங்களுடன், புத்த கத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், புத்தகத் திருவிழா மார்ச் 10 ஆம் தேதியன்று (இன்று) நிறைவு பெறுவதாக இருந்த நிலையில்,  தொடர்ந்து புத்தக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புத்தகத் திருவிழாவானது மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் புத்த கத் திருவிழா நடைபெறும். எனவே இந்த வாய்ப்பினை எழுத்தாளர்கள், கல்வி யாளர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பினை பயன் படுத்தி தங்களை தேவையான புத்த கங்களை வாங்கி பயன்படுத்த வேண் டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.