districts

img

பாதயாத்திரை சென்ற பக்தர்களை உபசரித்த இஸ்லாமியர்கள்

கோவை, பிப்.3- பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரைக்கு செல் லும் பக்தர்களுக்கு கோவையில் உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகள் வழங்கி இஸ்லாமியர்கள் உபசரிப்பு செய்தனர். மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் இச்செயல் அனை வரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  தைப் பூசத்தை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் செல் கின்றனர். கோவையிலிருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் பாதயாத்திரையாக பழனி செல்கின்றனர். இந்நிலையில், கோவை உக்கடம் அருகே பழனி பாதயாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர். இதே போன்று பசியில்லா கோவை என்கிற இஸ்லாமிய அறக் கட்டளையும், பக்தர்களுக்கு உணவளித்து உபசரித்தனர். மத நல்லிணக்கத்தை போற்றும் இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.