districts

img

பேருந்து நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி: அமைச்சர் துவக்கி வைத்தார்

திருப்பூர், மார்ச் 9- கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில் தமிழ் நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப் படக் கண்காட்சியினை அமைச்சர் துவக்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கரு ணாநிதி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்து றையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாத னைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி யினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் சனியன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ்,  மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், திருப்பூர் மாநகராட்சி 3 ஆம் மண்டலத்தலைவர் கோவிந்த சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கு.சதீஸ்குமார்,  நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) விஜயல லிதாம்பிகை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)  ஒ.ர.மனோஜ்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண் டார்கள்.