districts

img

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி

இளம்பிள்ளை, ஏப்.15- கல்வடங்கம் காவேரி  ஆற்றின் நீரில் மூழ்கி வியா ழனன்று உயிரிழந்த நான்கு  அரசு கல்லூரி மாணவர் களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சரின் உத்தரவுபடி தலா ரூ.2  லட்சத்திற்கான காசோ லைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று வழங்கினர். சேலம் மாவட்டம், எடப்பாடி மற்றும் மேட்டூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் 10 மாண வர்கள் சங்ககிரியை அடுத்துள்ள கல் வடங்கம் காவிரி ஆற்றில்  13ஆம் தேதி   குளித்துக் கொண்டிருந்த போது இடங்கண சாலையைச் சேர்ந்த மணிகண்டன், கண்ணந் ்தேரியை சேர்ந்த மற்றொரு மணிகண்டன், எருமைப் பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி, எட்டிக்குட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் ஆகிய நான்கு மாணவர் களும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதனிடையே உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினர்களுக்கு  தமிழ்நாடு அரசின் பொது நிவாரண நிதியி லிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதன்தொடர்ச்சியாக வெள்ளியன்று சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் தணி காசலம், சங்ககிரி வட்டாட்சியர் பானுமதி, எடப்பாடி வட்டாட்சியர் லெனின் உள்ளிட்ட  வருவாய்த் துறை அதிகாரிகள் உயிரிழந்த  நான்கு  மாணவர்களின் வீடுகளுக்கு  நேரில்  சென்று  குடும்பத்தினரிடம் தலா ரூ.2 லட்சத் திற்கான காசோலைகளை வழங்கினர்.