கோவை, ஏப்.21- கோவை அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த பெண்ணின் முதல் குழந்தை காணாமல் போன நிலை யில் போலீசார் ஒருவர் குழந்தையை மீட்டு குடும்பத்தாரிடம் பத்திரமாக ஒப்ப டைத்தார். கோவை, சங்கனூரை சேர்ந்த ருக் மணி என்ற பெண் தனது இரண்டாவது பிரசவத்திற்காக கோவை அரசு மருத்து மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டிருந்தார். ருக்மணியுடன் அவரது மகனான 4 வயது சிறுவனும் வந்திருந்தான். இந்த சூழலில், வியாழ னன்று மாலை அந்த சிறுவன் திடீரென காணாமல் போனான். சிறுவனை அவ ரது தந்தை மணிகண்டன் மற்றும் உறவி னர்கள் மருத்துவமனை வளாகம் முழு வதும் தேடி அலைந்தனர். அப்போது, மருத்துமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த முதல் நிலைக்காவலர் ஸ்ரீதர், மருத்துவமனையின் வெளிப்பகுதியில் திருச்சி சாலையில் ஒரு குழந்தை நிற் பதை பார்த்து அந்த குழந்தையிடம் பேசி னார். 4 வயதே ஆன அந்த சிறுவனால் தன்னை முறையாக அடையாளப் படுத்திக் கொள்ள முடியவில்லை. இதனைத்தொடர்ந்து, சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் தனது தாய் இருக்கும் வார்டை அடையாளம் காட் டியுள்ளான். தொடர்ந்து விசாரித்ததில் சிறுவன் ருக்மணி மற்றும் மணிகண்டன் ஆகியோரது மகன் என்பது தெரியவந் தது. பின்னர் முதல் நிலைக்காவலர் ஸ்ரீதர் அந்த சிறுவனை பெற்றோரிடம் பத்திர மாக ஒப்படைத்துச் சென்றார். காவல ரின் இந்த செயல் மருத்துவமனையின் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டி ருந்த சக பெற்றோர் மத்தியில் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியது.