திருப்பூர், ஜூலை 6- திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் நகரப் பேருந்துகளில் தமிழக அரசு பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டுவந்தும், அதை பயன்படுத்தி கொள்ள முடியாமல் பல பகுதிகளில் பெண்கள் உள்ளனர் என குற்றச் சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் முதல் நம்பியூர், குன்னத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 10, 10சி, 10இ, 45, 45எ பேருந்துகள், பெருமாநல்லூர் வரை செல்லும் 100 ஆம் எண் நகரப் பேருந்து உட்பட பல பேருந்துகள் பி.என் சாலையில் வழியாக செல்லும். இச்சாலையில் உள்ள பகுதிகளான அய்யம்பாளையம், வாஷிங்டன், அண்ணா நகர், மும்மூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் நகர பேருந்துகள் நிற்பதில்லை எனவும், மதிய நேரங்களில் போதுமான பேருந்துகள் இயங் குவதில்லை எனவும், பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து அய்யம்பாளையம் பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் இருந்து பெருமாநல்லூர் செல்ல இரண்டு கிலோமீட் டர். பள்ளி, மருத்துவமனை, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்து நிறுத்தம் என அனைத்து தேவைகளுக்கும் பெருமாநல்லூர் செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில், பொதுவாக வெளி ஊர்க ளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு நிற்காது. ஏதோ ஓட்டுநரை பொறுத்து ஒரு சிலர் பேருந்தை நிறுத்துவார்கள். இது போன்ற பகு திகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வ தற்காக தான் நகர பேருந்துகள் இயக்கப்ப டுகிறது. ஆனால் கட்டாயம் நிற்க வேண்டிய நகர பேருந்து இப்பகுதியில் பல நேரங்களில் நிறுத்துவதில்லை. நாம் கை நீட்டினாலும் நிறுத்தாமல் செல்கின்றனர். இங்கு நிழற் குடை கூட இல்லை இதனால் வயதானவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதுகுறித்து, வாசிங்டன் பகுதி பெண் பயணி ஒருவர் கூறுகையில், நான் பழைய பேருந்து நிலையம் அருகே வேலை செய்கின் றேன். தினசரி 10 மணிக்கு மேல் தான் வேலைக்கு செல்வேன் இரவு வீடு திரும்ப இரவு 9 மணி ஆகும். பெரும்பாலான நகரப் பேருந்துகள் வாஷிங்டன் பேருந்து நிறுத்தத் தில் நிற்பதில்லை. மதிய நேரங்களில் போது மான பேருந்துகள் வருவதில்லை. காலை 8 மணி முதல் 10 மணி வரை 20 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வரும் பெரும்பாலும் கூட்ட நெரி சலில் வருவதால், பேருந்து நிற்பதில்லை என்று ஒத்துக் கொள்ளலாம். ஆனால் காலை 10 மணிக்கு பிறகு வரும் பேருந்துகள் காலி யாக இருந்தும், ஓட்டுநர்கள் பேருந்துகளை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். அதுவும் பெண் பயணிகள் என்றால் சுத்தமாக நிறுத்து வதில்லை. தனியார் பேருந்துகள் நிறுத்து வார்கள். அதற்கு ரூ10 கட்டணம் செலுத்த வேண்டும். தமிழக அரசு பெண்க ளுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டு வந்தும், அதை பயன்படுத்தி கொள்ள முடியாமல் பல பகுதிகளில் பெண்கள் உள்ளனர். இரவு நேரங்களில் சரியான இடைவெளியில் பேருந்து வருவ தில்லை. வந்தால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று பேருந்துகள் வருகிறது. அதுவும் கூட் டம் அலைமோதுகிறது. எங்களால் ஏறுவ தற்கே முடியவில்லை. அரசு பேருந்து நிறுத் தத்தில் பேருந்து நிறுத்தி செல்வது, உரிய நேர இடைவெளியில் பேருந்து வந்து செல் வது, குறிப்பிட்ட நேரங்களில் அதிக பேருந் துகளை இயக்குவது உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித் தனர்.