அவிநாசி, ஜூன் 20 - அக்னிபாத் திட்டத்தின் எதிர்ப்பு தற் போது சிறிய அளவில்தான் வெளிவந்துள் ளது, நாளுக்கு நாள் அதன் கோர முகம் தெரி யவரும் என்று ஆ.ராசா எம்.பி. கூறினார்.. அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட அவி நாசி பேரூராட்சி இஸ்மாயில் வீதியில் நீல கிரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவல கத்தை ஆ.ராசா திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந் திப்பில் அக்னிபாத் திட்டம் குறித்து கேட்கை யில், அக்னிபாத் திட்டத்தின் ஒரு முகம் தான் மக்களுக்கு தற்போது தெரிந்துள்ளது, இதனுடைய கோரமுகம் வேறு மாதிரியாக உள்ளது. இதனை விளக்க வேண்டிய கடமை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் எங்களுக்கு உள்ளது. இந்த நாட்டை மதசார்பற்ற நாடு என் பதை மாற்றி இன்னும் 5 அல்லது 10 ஆண்டு காலத்தில் மதச்சார்புள்ள நாடாக அறி விப்பார்கள். இந்த நாட்டில் ஒரே ஒரு மதம் தான் இருக்கும், அந்த மதத்தை காப்பாற்ற வேண்டி ஆயுதப் பயிற்சி அரசு மூலமாக ராணுவத்தின் மூலமாக கொடுக்க முயற்சிக்கிறார்கள்.படிப்படியாக பயிற்சி தந்து நாலரை ஆண்டு காலத்தில் அவர் களை வெளியே கொண்டுவந்த பிறகு ஆர்எஸ்எஸ் அல்லது பிஜேபியில் சேர்த்துக் கொண்டு இந்துத்துவா நாடாக, மதவெறி கொண்ட நாடாக, மாற்றுகிற முயற்சி இதன் உள்ளே இருக்கிறது. அது விரைவில் வெளி வரும். விரைவில் இதைப் பற்றி நாடாளுமன் றத்தில் எப்படிப்பட்ட நிலைபாட்டை எடுப் போம் என்பதை எங்கள் கட்சித் தலைவர் தெரிவிப்பார். பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க கோரி தமிழக பிஜேபி முற்றுகை யிட்டது குறித்து கேட்டபோது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை என்ன, அதே விலைக்கு கொடுக்கிறார்களா? மற்ற வளரும் நாடுகளில் என்ன விலை உள்ளது. இந்தியாவிற்கும் மற்ற நாடு களைக் காட்டிலும் என்ன விலைக்கு விற்ப னையாகிறது என்பதை இணையதளத்தில் தேடிப் பார்த்தால் நிர்மலா சீதாராமனும், மோடியும் சொல்கின்ற பொய் அம்பலமா கும். இந்த நிகழ்வில் செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி, மண்டலத் தலைவர் பத்மநாபன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.
பூஜையை தவிர்த்த ராசா
அவிநாசியில் பழைய பேருந்து நிலை யம் அருகில் வணிக வளாகம் அடிக்கல் நாட் டுவதற்காக புரோகிதர்களை வைத்து பணி களை துவக்கினர். இதனைத் தவிர்க்க வேண்டும் எனக்கூறி ஆ.ராசா எம்பி., செங் கலை மட்டும் வைத்து பணிகளை துவக்கி வைத்தார். கடந்த நிதி நிலை அறிக்கையில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கபட்டிருந்தது. இதை தொடர்ந்து வணிக வளாக கட்டிடம் அடிக் கல் நாட்டுவதற்காக திருப்பூர் மாவட்ட நிர் வாகம் மற்றும் அவிநாசி பேரூராட்சி நிர்வா கம் புரோகிதர்களை வைத்து தேங்காய் பழம் பூஜைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்திருந் தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா புரோ கிதர்கள் பூஜை செய்ய வேண்டியதில்லை என்றும் தேங்காய் பழங்களை அகற்று மாறும் கூறினார். இதை அடுத்து செங்கலை மட்டும் நட வைத்து பணிகளை துவக்கி வைத்தார்.