districts

img

பள்ளியை திறக்க தாமதம்: மாணவ, மாணவியர்கள் தவிப்பு

நாமக்கல், ஆக.9- வெப்படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை திறக்க தாமத மானதால், மாணாக்கர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபா ளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெப்படை பகுதியில் ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வரும் நிலையில், சில நேரங்களில் காலை 9 மணி ஆனா லும் பள்ளி திறக்கப்படுவது இல்லை  என தெரிகிறது. இதனால் மாணவர் கள் நுழைவாயில் முன்பு காத்து கிடக் கும் அவல நிலை ஏற்படுகிறது. வாக னங்கள் அதிகளவில் செல்லும் ஈரோடு - சேலம் தேசிய நெடுஞ்சா லையில் இப்பள்ளி அமைந்துள்ள தால், விபத்துக்கள் ஏற்பட்டுவிடுமோ என்று பெற்றோர்கள் அச்சபடுகின் றனர். இந்நிலையில், புதனன்று காலை பள்ளி திறக்க தாமதமான தால் மாணவ, மாணவியர் வாயிலில் காத்துக் கிடந்தனர். இதுகுறித்த தக வல் பள்ளி தலைமை ஆசிரியைக்கு தெரிவிக்கப்படவே, பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் உடனடியாக பள்ளிக் கதவை திறந்து விட்டனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில், தினந்தோ றும் பள்ளியில் தனியார் அமைப்புகள் சார்பில் யோகா பயிற்சிகள் நடை பெற்று வருவதால், காலை 6  மணிக்கே பள்ளி கதவுகள் திறக்கப் படுவது வழக்கமான ஒன்றாகும். யோகா பயிற்சி முடிந்து 8 மணியள வில் அவர்கள் சென்று விட்ட பிறகு, பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர் உள்ளே சென்று விடுவர். இந்நிலை யில், யோகா செய்யும் குழுவினர் புத னன்று பயிற்சி மேற்கொள்ளாததால் பள்ளி திறக்கப்படவில்லை. ஆகை யாலே இத்தகைய நிகழ்வு நடந்துள் ளது. இனிவரும் காலங்களில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மூல மாக தினந்தோறும் பள்ளியை திறப் பதற்கான நடவடிக்கை எடுக்கப் படும், என்றார்.