வெள்ளிக்குப்பம்பாளை யம் கிராமத்தில் இரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் விடிய விடிய ஊர் மக்கள் ஒன்று கூடி தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய கலைகளில் ஒன்றான தெருகூத்து நாடகத்தை நடத்தி வருகின்றனர். இந்திய கலை வடிவங்களில் மிகவும் தொன்மையானது தெருக்கூத்து. தமிழ கத்தின் நாட்டுப்புற, நிகழ்த்து கலைகளின் உன்னத வடிவமாக நடத்தப்பட்டு வரும் தெருக்கூத்து, நம் பாரம்பரிய கலைகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. திறந்த வெளி இடங்களில் தெருக்களின் சந்திப் பில் களம் அமைத்து நடத்தப்படுவதால் இக் கலைக்கு தெருக்கூத்து எனப்பெயர் பெற் றது. தமிழகத்தில், 19 ஆம் நூற்றாண்டு களில் செல்வாக்கு பெற்று வளர்ந்த இக் கலை, 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி யில் நலிவடைய துவங்கியது.
இது ஒரு பொழுதுபோக்கு கலையாக மட்டுமின்றி, மக்களுக்கு தெரிந்த கதை கள், தெரியாத வரலாறுகள், நீதி போதனை கள் தெருக்கூத்து வாயிலாக தகவல் பரி மாற்றம் செய்யப்பட்டன. நிகழ்த்து கலை களில் மூலக்கலையாக விளங்கிய தெருக் கூத்தில் இருந்து தற்போது பல நவீன கலை கள் உருவாகி, அவை ஊடகங்கள் வாயி லாக மக்களை சென்றடைந்தாலும் தெருக் கூத்து மக்களிடம் பெற்றிருந்த நெருக் கத்தையும் ஈடுபாட்டையும் பெறவில்லை என்றே கூறலாம். இந்நிலையில், இன்றும் தெருக்கூத்து கலையை தங்களது வாழ்வின் ஒரு அங்கமாக, தங்களின் நோய் தீர்க்கும் மருந் தாக கருதி கடந்த இருநூறு ஆண்டுகளுக் கும் மேலாக ஆண்டுதோறும் ஊர் கூடி விடிய விடிய தெருக்கூத்தை நடத்தி மகிழ் கிறது வெள்ளிக்குப்பம்பாளையம் என் னும் கிராமம். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள வெள்ளிகுப்பம் பாளையம் என்னும் கிராமம் மற்றும் சுற்றி யுள்ள பல்வேறு கிராமங்களில் பல ஆண்டு களுக்கு முன்பு கொல்லை நோய் என்ற ழைக்கபட்ட பிளேக் உள்ளிட்ட நோய்கள் தாக்கி பல நூறு பேர் வரிசையாய் மாண்டு போனார்கள். வீடு தோறும் மரணங்கள் தொடர்ந்த அக்காலகட்டத்தில் மக்க ளுக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் அளிக் கும் வகையில் இரண்ய நாடகம் என்ற தெருக்கூத்து நடத்தப்பட்டுள்ளது. பக்த பிர கலாதனின் கோரிக்கையை ஏற்று திருமால் நரசிம்ம அவதாரத்தில் வெளிவந்து தீமை யின் அடையாளமான இரண்யனை அழிப்ப தாக கூறும் இத்தெருக்கூத்து நாடகத்தால் அன்று தங்களது ஊரை பிடித்த பிணி மெல்ல மெல்ல விலகி மகிழ்ச்சி திரும்பிய தாக தெரிவிக்கும் வெள்ளிக்குப்பம்பாளை யம் கிராம மக்கள், அன்று முதல் பல தலை முறைகளை கடந்தும் தொடர்ந்து பொங் கல் பண்டிகையின் போது இந்த தெருக் கூத்து நாடகம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். முதல் நாள் மாலை ஆறு மணிக்கு துவங்கும் இரண்ய நாடக தெருக்கூத்து இரவு முழுவதும் தொடர்ந்து அடுத்த நாள் காலை சூர்ய உதயத்திற்கு பின்பு இரண் யன் கொல்லபட்டு இறைவன் கோபம் தணிந்த பின்னரே இந்நிகழ்ச்சி நிறைவ டைகிறது.
முழுக்க முழுக்க பகதூர் கிரா மத்தினரே இத்தெருக்கூத்தில் வேடமிட்டு நடிப்பதும், இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவின் எந்த பகுதியில் வேலை நிமித்தமாக இருந்தாலும் சரி, அல்லது வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தாலும் இத் தெருக்கூத்து நடத்தப்படும் நாளில் தவறா மல் தங்களது கிராமத்தை வந்தடைந்து இக் கூத்தில் பங்கெடுப்பது தனிச்சிறப்பு. நம் பாரம்பரிய கலைகள் கலைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல, மக்கள் பயன்பா டிற்காகவே உருவாக்கப்பட்டவை என வலி யுறுத்தும் கிராமமக்கள் நாங்கள் நோய் நொடியின்றி வாழ வழிவகுக்கும் இக்கலை வடிவம் இனி வரும் ஆண்டுகளிலும் விடாது தொடரும் என்கின்றனர். இதனை உறுதி படுத்தும் விதமாக சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை வெட்டவெளி யில் கொட்டும் பனியினையும் கடும் குளி ரையும் பொருட்படுத்தாமல் ஊர் மக்கள் அனைவரும் இத்தெருகூத்தை விடிய விடிய கண்டு ரசித்ததே தெளிவுபட உணர்த்தி யது. இவர்களின் அசையாத நம்பிக்கை இன்று வரை ஒரு தொன்மையான கலை யினை வாழவைத்து கொண்டிருகின்றது.
-இரா.சரவணபாபு, மேட்டுப்பாளையம்