districts

img

கண்ணீருடன் வழியனுப்பிய மக்கள்..! ஆனந்த கண்ணீருடன் விடைபெற்ற ஆட்சியர்

நாமக்கல், ஜூன் 25- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வாழ்த்து தெரிவிக்க வந்த திருநங்கைகள் அவரை பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டதால், ஆட்சியரும் கண்ணீருடன் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கடந்த 2023 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட ச.உமா, சிறந்த முறையில் பணியாற்றி வந்தார். இந் நிலையில், அவர் தமிழக துணை முதல்வரின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையின் கூடுதல் செயலாள ராக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டார். இத னால் அவர், நாமக்கல் ஆட்சியர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, செயலாளராக தலைமை செயலகத்தில் பணியில் சேரவுள்ளார். இதனிடையே, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரை, மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன் மற்றும் அரசுத்துறை அலு வலர்கள், பொதுநல அமைப்பினர், திருநங்கைகள் உள் ளிட்டோர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். மாவட்ட ஆட்சி யர் தங்களுக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கி, பல்வேறு அரசு உதவிகளை பெற்று தந்ததற்கு அனைத்து தரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.  அப்போது, திருநங்கைகள் மாவட்ட ஆட்சியருக்கு, ஆனந்த கண்ணீர் பொங்க நன்றி தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் பல்வேறு உதவிகளை குறிப்பிட்டு அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ஆனந்த கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி தெரி வித்தார். அப்போது, நன்றி தெரிவிக்க வந்த பலரும், ஆட்சியர் கண் கலங்கியதை கண்டு, அவர்களும் கண் கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.