districts

img

ரூ.99 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம்: காணொளி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைத்தார்

திருப்பூர், ஜன.22- திருப்பூரில் ரூபாய் 99.24 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட் டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின்  காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற் றும் அதைச்சுற்றியுள்ள ஊராட்சி  ஒன்றியங்களை சேர்ந்த 155 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு பவானி  ஆற்றினை நீராதாரமாக கொண்டு ரூபாய் 99.24 கோடி மதிப்பீட்டில் கூட் டுக் குடிநீர் திட்டத்தை தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.   1.92 லட்சம் மக்கள் பயன்பெறும் இத்திட்டத்தில் ஆண்டுக்கு 8.07  மில்லியன் லிட்டர் நீர் விநியோ கம் செய்யும் வகையிலும், தேவை அதிகரிக்கும்போது 25.42 மில்லி யன் லிட்டர் நீர் விநியோகம் செய் யும் வகையிலும் கூட்டுக் குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலை மையில் உள்ளாட்சி பிரதிநிதிக ளுக்கான திட்ட விளக்க கூட்டம்  பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற் றது. இதில் மாவட்ட பொறியா ளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு திட்டம் குறித்து விளக்கம் அளித்தனர்.