திருப்பூர், டிச.22- திருப்பூரில் குடிநீர் குழாய் பணிக் காக தோண்டிய பள்ளத்தில் தடுமாறி விழுந்து ஆடிட்டர் பலியானார். இப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததா ரர்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் அலட்சியமாக விட்ட தால் தான் இந்த உயிரிழப்பு சம்ப வம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நல்லாஞ்செட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜார்ஜ் (74). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்து, திருப்பூர் - தாராபுரம் சாலை, சேரன் காலனி பாலாஜி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தனி யார் நிறுவனத்தில், ஆடிட்டராக பணி யாற்றி வரும் இவர், கடந்த டிச.17 ஆம் தேதியன்று காலை வீட்டில் இருந்து, அலுவலகத்துக்கு புறப் பட்டு சென்றார். இரவு 8.30 மணி அளவில் அவர் வீடு திரும்பியபோது, கோயில் வழியில் இருந்து முத்த னம்பாளையம் செல்லும் சாலையில் டி.ஜே. கம்பெனி அருகில், குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள் ளத்தில் வாகனத்துடன் தடுமாறி விழுந்து விட்டார். அங்கு, குழாயை சுற்றி பெட்டி வடி வில் காங்கிரீட் அறை அமைப்பதற் காக சென்ட்ரிங் கம்பிகள் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் நோக்கி நீட்டிக்கொண்டு இருந்தன.
ஆனால், அந்த பள்ளத்தின் அருகில் தடுப்பு அரண்கள் அல்லது எச்சரிக்கை அறி விப்பு பலகை எதுவும் வைக்கப்பட வில்லை. இதனால் இரவு நேரத்தில், அங்கு பள்ளம் தோண்டப்பட்டு இருப் பது தெரியாமல், ஜார்ஜ் தடுமாறி பள்ளத்தில் விழுந்து, சென்ட்ரிங் கம் பிகள் குத்தி படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அங்கிருந் தோர், அவரது மகள் கல்பனாவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர். இந்த சம்பவம் குறித்து, கடந்த டிச.18 ஆம் தேதியன்று, நல் லூர் காவல் நிலையத்தில் அவரது மகள் கல்பனா புகார் கொடுத்த அடிப் படையில், ஐ.பி.சி. 279, 304- ஏ பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. திருப்பூர் நகரில் நான்காவது குடி நீர் திட்டம், பாதாள சாக்கடை, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வரு கின்றன.
ஒரே நேரத்தில் இந்த பணி கள் நடைபெற்று வரும் நிலையில், வெவ்வேறு ஒப்பந்ததாரர்கள் பணி களை மேற்கொண்டு வருகின்றனர். முறையான திட்டமிடல், முன்னறிவிப்பு எதுவுமின்றி தான்தோன்றித்தனமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன. ஒரு பணியை செய்து முடிக் கப்பட்ட இடத்திலேயே வேற ஒரு ஒப் பந்ததாரர் மீண்டும் சாலையைத் தோண்டி வேலை செய்வது, அரை குறையாக வேலை செய்துவிட்டு மாதக்கணக்கில் கிடப்பில் போடுவது என ஒப்பந்ததாரர்கள் செயல்படுகின் றனர். திட்டப் பணிகள் நடைபெறும் இடங்களில் தகவல் பலகையோ, எச்சரிக்கை அறிவிப்பு பலகையோ வைக்கப்படுவதில்லை. உரிய பாது காப்பு ஏற்பாடுகளோ, தடுப்பு அரண் கள் வைப்பதும் இல்லை. இதன் கார ணமாகவே ஒருவரது உயிர் அநியாய மாக பறிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியை மேற்கொண் டவர்களின் பொறுப்பற்ற அலட்சியம் காரணமாகவே உயிரிழப்பு விபத்து ஏற்பட்டு இருப்பதால், மாநகராட்சி நிர்வாகம் இதற்கு பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். குடும்பத்தில் வரு வாய் ஈட்டக் கூடியவராக இருந்த, குடும்பத் தலைவரை இழந்து இருப்ப தால் அந்த குடும்பத்திற்கு சட்டப்படி உரிய இழப்பீடு வழங்கவும் வேண் டும் என்று பாதிக்கப்பட்டோர் கூறி யுள்ளனர்.