districts

img

டாஸ்மாக் கணினிமயமாக்கப்படும்

ஈரோடு, ஆக. 22- டாஸ்மாக் துறையை முழுமையமாக கணினி மய மாக்குவதற்கான பணிகள் மூன்று மாதங்களில் நிறைவு பெறும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் ரூ. 16.67  கோடி மதிப்பிலான சாலைப் பணிகளை வீட்டு வசதி, நகர்ப்புற  வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை  அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஆணை யர் பி.ஜானகி ரவீந்திரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற் றனர்.  அதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு மாநக ராட்சியில் தற்போது ரூ. 201 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு நீண்ட நாள்களாக தேங்கிக் கிடக்கும் பணிகள்  மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ரூ.132 கோடி சாலைகள்  அமைப்பதற்கும், ரூ. 15 கோடி தெருவிளக்குகள் அமைப் பதற்கும், ரூ. 20 கோடி திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளுக்கு மேற்கொள்ளவும் செலவிடப்படும். சோலாரில் உலகத்தரத்திலான பேருந்து நிலையம்  கட்டு மான பணிகள் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக்கில் சுமார்  2,000 பேரின் நீண்ட நாள் கோரிக்கையான பணியிட மாற்றம்,  தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த பாரபட்சமும்மின்றி  அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. டாஸ்மாக் துறையையே முழுமையமாக கணினி மயமாக்கு வதற்கான பணிகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிறைவு செய்யப்பட்டு விடும். அந்த துறையில்  ஒரு பொருள் எங்கு வாங்கப்பட்டது என்பது முதல் அது நுகர் வோரை சென்றடையும் வரையிலான செயல்பாடுகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும்.  500 டாஸ்மாக்  கடைகள் மூடப்பட்ட பின்னர் வேறு எங்கும் புதிதாக ஒரு கடை கூட திறக்கப்படவில்லை.  ஏற்கனவே மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபணைகளின் அடிப் படையில், கடைகள் இடமாற்றம் மட்டுமே செய்யப்பட் டுள்ளன என்றார்.