திருப்பூர், ஜூன் 24- திருப்பூரில் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவான தம்பதியினரை கைது செய்து பணத்தை மீட்டு தரக் கூறி பாதிக்கப்பட்ட பொது மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருப்பூர் நாச்சிபாளையம் முத்து மாரியம்மன் கோவில் 4 ஆவது வீதி பகுதியில் வசித்து வருபவர் தங்கம்(45) மற்றும் ஆர்த்தி (35) தம்பதியினர். இவர் கள் அப்பகுதியில் கடந்த 4 ஆண்டுக ளாக வசித்து வந்துள்ளனர். மேலும் வீர பாண்டி பகுதியில் இவர்களுக்கு சொந் தமாக துணிக்கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், தம்பதியி னரிடம் அப்பகுதியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரையிலான பலகார மற்றும் ஏலச் சீட்டு சேர்ந்துள்ளனர். சீட்டு காலம் முடிந்தவர்களுக்கு இரண்டு மாத காலங் களுக்கு மேலாகியும் பணத்தை கொடுக் காமல் இருந்துள்ளனர். கடந்த வாரம் இவர்களது வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்களிடம், தங்களுக்கு சொந்த மான நிலத்தை விற்று பணம் தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன் தம்பதியினர் தலைம றைவானது தெரிய வந்துள்ளது. இந்நி லையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் நிலையம் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை பலரிடம் மனு அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்காததால், திங்க ளன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு மோசடி செய்த தம்பதியினர் இருவரையும் கைது செய்து தங்களது பணத்தை மீட்டு தரக் கோரி மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துரா ஜிடம் மனு அளித்தனர்.