districts

img

ரூ.2.57 கோடி மோசடி: தோல் பதனிடும் ஆலை உரிமையாளர் புகார்

ஈரோடு, ஆக.18- ரூ.2 கோடியே 57 லட்சத்து 45 ஆயிரம்  மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டுத்  தருமாறு தோல் பதனிடும் ஆலை உரி மையாளர் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத் தில் புகாரளித்தார். ஈரோடு மாவட்டம், பி.பெ.அக்ரஹா ரம், டேனரி வீதியை சேர்ந்தவர் ஞான பால் (60). அன்னை பாத்திமா லெதர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான இவர், ஈரோடு மாவட்ட காவல் துறை  கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனி யன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் 35 ஆண்டுகளாக அன்னை பாத்திமா என்ற பெயரில் தோல் பதனி டும் ஆலை, தோலினால் செய்யப்பட்ட பொருட்கள், கெமிக்கல்ஸ் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வரு கிறேன். விற்பனை பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ராணிப் பேட்டையில் குடோன் வைத்து நடத்தி  வந்தேன். இந்நிலையில், 2020 ஆம்  ஆண்டில் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு,  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற் கொண்டேன். இதனால், தொழிலை  முழுமையாக கவனிக்க முடியவில்லை.  இதனிடையே, என் நிறுவனத்தில் பணி யாற்றிய பரமகுரு, கோபி, ஜமுனா மற் றும் தணிக்கைவேல் ஆகியோரை தொழிலை நிர்வாக்க ஏற்பாடு செய் தேன். சிகிச்சையில் இருந்தபோது, பரம குருவுக்கு வங்கியின் மூலம் பண பரிமாற் றம், தோல் பொருட்கள், கெமிக்கல்ஸ்  என ரூ.13.29 கோடி அனுப்பியுள்ளேன்.  உடல் நலம் சீரானவுடன், கடந்த ஜனவரி யில் ராணிப்பேட்டை குடோனுக்கு  சென்று பார்த்தேன். வெளிநாட்டிற்கு  அனுப்ப வைத்திருந்த ஏற்றுமதி பொருட் கள் மாயமாகி இருப்பதை பார்த்து  அதிர்ச்சி அடைந்தேன். பரமகுருவுக்கு தோல் பொருட்கள் உற்பத்தி செய்ய அனுப்பிய ரூ.1 கோடியை, பொருட்களை உற்பத்தி செய்யாமல், கோபியின் சகோதரர் மனைவி மகாலட்சுமிக்கு சொந்த உப யோகத்துக்காக ரூ.70 லட்சம் வழங்கி யுள்ளார். இத்தாலிக்கு பொருள் அனுப் பும் கம்பெனிக்கு, டி.எம்.எஸ் பெயர்  கொண்ட நிறுவனத்தின் சார்பில் பொருள் அனுப்பி ஏமாற்றி உள்ளனர்.  எனது அனுமதியின்றி பணம், உற்பத்தி செய்யப்பட்ட ஷூக்கள், இருப்பு வைத் திருந்த தோல் போன்றவற்றை எனது வாடிக்கையாளர்களுக்கே டி.எம்.எஸ்  பெயர் கொண்ட நிறுவனத்தின் சார்பில்  அனுப்பி ரூ.2 கோடியே 57 லட்சத்து  41 ஆயிரத்து 851 மோசடி செய்துள்ள னர். என்னை ஏமாற்றி மோசடி செய்த  பரமகுரு, கோபி, ஜமுனா, தணிகை வேல், பசீர், மகாலட்சுமி, டி.எம்.எஸ் நிறு வனம் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரி வித்திருந்தார். மேலும், ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் சங்கீதா விசாரனை மேற்கொண்டு பரமகுரு, கோபி, ஜமுனா, தணிக்கைவேல், பசீர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட இவர் களை கைது செய்து, மோசடி செய்யப் பட்ட பணத்தை மீட்டுத்தர வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.