districts

img

பதவி உயர்வை உரிய காலத்தில் வழங்கிடுக

சேலம், ஏப்.20- அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு  உரிய காலத்தில் உடனடியாக வழங்க வே ண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்கத்தின் துணை வட்டார வளர்ச்சி  அலுவலர் நிலையின் போது விருப்பம் மாறு தலும், பிற நிலை அலுவலர்களுக்கு விருப் பம் மாறுதலும் வழங்கிட வேண்டும். பதி வறை எழுத்தர் அலுவலக உதவியாளர் உள்ளிட்டோருக்கு விகிதாச்சார அடிப்ப டையில் இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். தற்காலிக பணி  நீக்கத்தில் உள்ள ஊராட்சி செயலாளர் களுக்கு பிழைப்பு ஊதியம் வழங்க வேண் டும். நிலுவையில் உள்ள குற்ற குறிப்புகளை இறுதி செய்தல் வேண்டும். அரசியல் மற் றும் உயர் அலுவலர்கள் நெருக்கடி காரணமாக ஒரு சார்பாக நடவடிக்கை எடுப் பதை தவிர்த்து, நடுநிலையோடு மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மேலும், இந்த கோரிக்கைகளை வலியு றுத்தி ஏப். 27 ஆம் தேதி மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என  அறிவிக்கப்பட்டது.நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜான் ஆன்ஸ்டின் மாவட்ட தலைவர் பிஜே  கண்ணன் மாநில துணைத்தலைவர் திரு வேரங்கன் மாநில செயற்குழு உறுப்பினர் கேசவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.