சேலம், அக்.26- தமிழ்நாடு கிரிக்கெட் லீக்-கின் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா அக்.30 ஆம் தேதியன்று சேலத்தில் துவங்கு கிறது. கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் கிராமப்புற இளைஞர் களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழ் நாட்டு கிரிக்கெட் லீக் கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 160 கிராமப்புற வீரர்களைக் கொண்ட 8 அணிகள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே உயர்தர பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் லீக்-கின் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா அக்.30 ஆம் தேதியன்று தொடங்கி நவ.13 ஆம் தேதி வரை சேலம் மாவட்டம், உடையா பட்டி பகுதியில் உள்ள எஸ்ஆர்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைக்க உள்ளார். இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 3 லட்ச ரூபாயும், இரண்டாம் பரிசாக 2 லட்ச ரூபாயும், மூன்றாம் பரிசாக 1 லட்ச ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமையில் நடை பெற்றது. இதில் டிசிஎல் செயலாளர் கண்மணி ராஜா உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.