districts

img

இ - பாஸ் சோதனை சாவடியில் தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு

கோவை, மே 10- இ - பாஸ் சோதனை சாவடியில்  ஆய்வு செய்த தமிழக தலைமை  செயலாளர் சிவதாஸ் மீனா செய்தி யாளர்களிடம், கோடை காலத் தில் சுற்றுலா வருவோரின் எண் ணிக்கையை கணக்கிடவே இந்ந டைமுறை செயல்படுத்தப்பட்டுள் ளது” என்றார். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் இருந்து உதகை செல் லக்கூடிய அனைத்து சுற்றுலாப் பய ணிகளுக்கும் இ - பாஸ் கட்டாயம்  என்ற விதிமுறை கடந்த 7 ஆம்  தேதியன்று முதல் அமல்படுத்தப் பட்டு வருகிறது. நீலகிரிக்கு சுற் றுலா செல்லக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் இ - பாஸ் உள் ளதா என்பதை கண்காணிக்க நீல கிரி மாவட்டத்தின் நுழைவு வாயி லான மேட்டுப்பாளையம், கல்லார் பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு அனைத்து வாக னங்களுக்கும் இ - பாஸ் உள்ளதா என்று சோதனை செய்த பின்பே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளியன்று உதகையில் மலர் கண்காட்சி துவங் கியதால் ஏராளமான சுற்றுலாப் பய ணிகள் வருவதால், தமிழ்நாடு அரசு  தலைமை செயலாளர் இந்த நிகழ் வில் வெள்ளியன்று பங்கேற்கி றார். இதற்காக உதகை செல்ல  மேட்டுப்பாளையம் வந்த தலை மைச் செயலாளர் கல்லார் பகுதி யில் இ-பாஸ் நடைமுறையை அமல் படுத்த அமைக்கப்படுள்ள சோதனை சாவடியில் நேரில் ஆய்வு  செய்தார். மேலும், சுற்றுலாப் பயணங்க ளுக்கு எளிதில் இ - பாஸ் கிடைக்க  என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது மற்றும் வாகன நெரிசல் எந்த அளவுக்கு உள்ளது என்பதை குறித்து ஆய்வு செய்து உடனிருந்த கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை செய்தார்.  இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, “இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை சுற்றுலாப் பயணி களுக்கு எவ்வித தாமதமின்றி எளி மையாக கிடைக்க அனைத்து ஏற்பா டுகளும் செய்யப்பட்டுள்ளது. திடீ ரென சுற்றுலா செல்ல திட்டமிடு பவர்கள் கூட எளிதில் இந்த இ -  பாசை பதிவு செய்யும் அளவுக்கு  ஆன்லைன் மூலம் இ - பாஸ் நடை முறையை எளிமைப்படுத்தியுள் ளோம்”. இந்த இ-பாஸ் நடைமுறைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருக்கக்கூ டிய வியாபாரிகள் எதிர்ப்பு தெரி விப்பதாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகையில், அவர் “இ -  பாஸ் நடைமுறையை அதற்கா கத்தான் எளிமைப்படுத்தி உள் ளோம். இதற்காக யாரிடமும் பயணி கள் அப்ரூவல் பெற வேண்டிய தில்லை. சுற்றுலாப் பயணிகள் ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தாலே உடனடியாக அவர்களுக்கு இ -  பாஸ் கிடைக்கும், இதனால் அவர்க ளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என்பதோடு சுற்றுலாப் பய ணிகள் வருகை குறையாது என்ப தால் துவக்க காலத்தில் வியாரிகள் அடைந்த அச்சம் தற்போது விலகி யுள்ளது”. மேலும், கோடை காலத் தில் சுற்றுலா வருவோரின் எண் ணிக்கையை கணக்கிடவே இந்ந டைமுறை செயல்படுத்தப்பட்டுள் ளது” என்றார்.