கோவை, மே 28- தமிழ்நாட்டில் சராசரி அளவிலேயே தென்மேற்கு பருவமழை பொழியும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் மே இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தொடங்கும் தென்மேற்கு பருவமழை யானது, செப்டம்பர் மாதம் வரை நீடிக் கும். கேரள மாநிலத்தில் அதிகம் பெய் யும் தென்மேற்கு பருவமழை, அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியா குமரி மாவட்டங்களிலும் கொட்டித்தீர்க் கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் பருவமழையானது தமிழ் நாட்டில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக் கழகம் கணித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை பல் கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, எதிர் வரும் தென்மேற்கு பருவமழை காலத் துக்கான (ஜூன் முதல் செப்டம்பர்) மழை பற்றிய முன்னறிவு செய்வதற்காக தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கம் ஆகியவை ஆராய்ச்சி மேற்கொண்டன. இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசி பிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற் றழுத்த குறியீடு ஆகியவற்றை உப யோகித்து, ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என் னும் கணினி கட்டமைப்பை கொண்டு 2023 ஆம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட் டது. அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.