உடுமலை, பிப்.9- தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற சிறப்புடைய மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 60 ஆண்டுகளாக நவீனப்படுத்தப்படாமல் உள் ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, கிருஷ்ணாபுரம் பகுதியில், 1960 ஆம் ஆண்டு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற பெயரில் தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற சிறப்புடன் நிறுவப்பட்டது. அன்றைய தொழில் நுட்பத் தின்படி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு நாள் ஒன்றுக்கு 1, 250 டன் கரும்பு அரவைச் செய் யும் திறன் கொண்டதாக இயங்கத் தொடங் கியது. இதன்பின் 1995 ஆம் ஆண்டு இந்த ஆலையின் கழிவுகளிலிருந்து எரிசாரயம் தயாரிக்கும் ஆலையும் தொடங்கப்பட்டது. இந்நிலையில், 60 ஆண்டுகளைக் கடந்து இயங்கும் இயந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் ஆலையின் உற்பத்தி பாதிக் கப்படுகிறது. இதனால் ஆலையைத் தொடர்ந்து இயக்க முடியாமல் நிதி நெருக் கடி உருவாகிறது. தொழிலாளர்களுக்கும் சீராகச் சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதற்கு தீர்வாக புதிய இயந்திரங்களைப் பொருத்தி ஆலையைப் புதுப்பிக்க வேண் டும் என தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப் பட்டது.
கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு, 63500 டன் கரும்பு அரவை செய்து. 7.88 சதவிகிதம் சர்க் கரை கட்டு அடிப்படையில் 49945 குவிண் டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் ஆண்டு சுமார் 1 லட்சம் டன் கரும்பை அரவை செய்ய இலக்கு முடிவு செய்து விவசாயிகளிடம் கரும்பு முன்பதிவு நடத்து வருகிறது. இதில் தற்போது வரை சுமார் 1870 ஏக்கர் கன்னி கரும்பும் 965 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தமாக 2835 எக்கர் கரும்புகளை ஆலைக்கு தர விவசாயி கள் முன்பதிவு செய்துள்ளார்கள். 1960-ல் தொடங்கப்பட்ட ஆலையில் இயந்திரங்க ளைப் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யா மல் 1978 ஆம் ஆண்டு உற்பத்தியை அதிகம் செய்ய சிறிய அளவில் மட்டுமே மாற்றம் செய் யப்பட்டது தான் இன்று வரை உள்ளது. கரும் புகளை எடை மேடையிலிருந்து அரவைக்கு கொண்டு செல்ல புதிய இயந்திரங்கள் (கன் வெயர்) இல்லை. மேலும் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய போதிய உதிரி பாகங்கள் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் இல்லாமல் இருப்பதால் மீண்டும் ஆலையை இயக்க அதிக நாட்கள் ஏற்படுகிறது. கரும்புச் சாறுகளைப் பாதுகாப் பாக வைத்து கொள்ள முடியாத நிலையால் தரமான சர்க்கரை கிடைப்பது இல்லை. இத னால் ஆலைக்குத் தொடர் இழப்பு ஏற்படு கிறது. தமிழ்நாட்டில் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக இருந்த ஆலை. தற்பொழுது நஷ்டத்தில் இயக்க வேண்டிய நிலையில் உள் ளதை தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு ஆலையை நவீனப் படுத்த வேண்டும். பல் வேறு நிதி மற்றும் வறட்சி காலத்திலும் சிறப் பாக செயல்பட்டு வந்த அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையை, காலத்திற்கு ஏற்றார் போல் நவீனப் படுத்தாமல் இருப்பதால் விவ சாயிகள் மற்றும் ஆலை தொழிலாளர்க ளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பித்து விவசாயிகளையும் ஆலை தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை யாக உள்ளது.