districts

img

பொய் வழக்கு: காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக

சேலம், மார்ச் 13- காடையாம்பட்டி அருகே நிலம் சம்பந்த மான பிரச்சனையில் சிபிஎம் தாலுகாச் செய லாளர் உட்பட 20 பேர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, தும்பிப்பாடி ஊராட்சி போயர் தெரு வில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், இப்பகுதியினரின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல் லவும், அப்பகுதி மக்கள் வேலைக்கு சென்று  வர வேண்டுமென்றால் அப்பகுதியில் உள்ள  ஒரு குறுகிய சாலை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அந்த குறுகிய சாலையை அகலப்படுத்தி கொடுக்க வேண் டும் என கடந்த பத்து ஆண்டுகளாக பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு கோரிக்கை  மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அம்மமனுக்கள் குறித்து அரசு அதி காரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தால், கடந்த பிப்.28 ஆம் தேதியன்று பொது மக்கள் ஒன்று திரண்டு தாங்களாகவே பொதுப் பாதையை அமைத்தனர். இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், தன்னை  தாக்கி எங்கள் நிலத்தில் பாதை அமைத்து விட் டதாகவும், செல்போனில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டதாகவும், ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின் அவர் கொடுத்த புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓமலூர் தாலுகாச் செயலாளர் ஈஸ்வரன் உட்பட 20 பேர் மீது  பல்வேறு வழக்குகள் போடப்பட்டு விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரூர் காவல் ஆய்வாளர் சரோஜா பொய் வழக்கு போடுவதற்கு உறு துணையாக இருந்தாகவும், அவரை கைது செய்ய வேண்டும். பொய் வழக்கை திரும் பப்பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தாலுகாச் செயலா ளர் ஈஸ்வரன் தலைமையில் புதனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட் டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராம மூர்த்தி, வட்டக்குழு உறுப்பினர்கள் சேகர், சின் ராஜ், மகேஸ்வரி, செல்வகுமார், முருகன் உட்பட பாதிக்கப்பட்டோர் கலந்து கொண் டனர்.