சேலம் ஜூலை 12- 74 லட்சம் முறைசாரா தொழிலா ளர்களின் காணாமல் போன தரவுகள் குறித்து பொறுப்பில்லாமல் பதில் கூறும் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என சிஐடியு வலியுறுத் தியுள்ளது. கட்டுமான முறைசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 74 லட்சம் தொழிலா ளர்களின் ஆன்லைன் தரவுகள் காணா மல்போன சம்பவம் குறித்து பொறுப்பில் லாமல் பதில் கூறும் அதிகாரிகளை அரசு இடைநீக்கம் செய்ய வேண்டும். பதிவு செய்த அனைத்து தொழிலா ளருக்கும் நலவாரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு சேலம் மாவட்டக்குழு சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளியன்று வாகனப் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. சேலம் ஜங்ஷன், உழவர் சந்தை, ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி நான்கு ரோடு, பழைய பேருந்து நிலையம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிஐடியு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதய குமார், மாவட்டச் செயலாளர் ஏ.கோ விந்தன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் இதேபோன்று மேற்கண்ட கோரிக் கைகளை முன்வைத்து, திருப்பூர் மாவட்டம், வெங்கமேடு நால் ரோட்டில் தெருமுனைக்கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. கட்டுமான சங்க தெற்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, துணைத் தலைவர் பி.பாலன், கட்டுமான சங்க தெற்கு ஒன்றியச் செயலாளர் பொம்மு துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.