ஈரோடு, நவ.21- ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் செயல்படும் நூலகங்கள், அரசு பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண் டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி தமிழ்நாடு முழுவதும் பயணித்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல் படும் நூலகங்கள், பள்ளிகள், கல்வித்துறை அலுவலர்க ளின் அலுவலங்களில் ஆய்வு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக செவ்வாயன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு தொகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண் டார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர் களிடம் உரையாடினார். மேலும், பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை தேங்கவிடாமல் உடனுக்குடன் நிறைவேற்று மாறும், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டங்களை எவ்வித தொய்வும் இல்லாமல் அலுவலர்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத் உட்பட துறை சார்ந்த அலு லவர்கள் உடனிருந்தனர்.