அவிநாசி,மே 11- அவிநாசி அருகே கருவலூர் அண்ணா நகர் பகுதி யிலுள்ள 150 குடும்பங்களுக்கு திங்களன்று அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழு வதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத் தில் கொண்டு, அதிமுக திருப்பூர் மாவட்ட செயலா ளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்த் சார்பில் கருவலூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உள்ள 150 ஏழை குடும் பங்களுக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அவினாசி ஒன் றிய குழு தலைவர் அ.ஜெகதீசன், அதிமுக அவிநாசி ஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணி, கருவலூர் ஊராட்சி கழக செயலாளர் காத்தவராயன், ராமநாத புரம் ஊராட்சி கழக செயலாளர் குமார், உப்பிலி பாளையம் ஊராட்சிக் கழகச் செயலாளர் கணேசன், ராமநாதபுர ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி (எ) பழ னிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.