உதகை, மார்ச் 25- குன்னூர் ரயில்வே பணிமனையில் பர்னஸ் ஆயில் மலை ரயில் என்ஜின், டீசல் என்ஜின் ஆக மாற்றம் செய்யப் பட்டு பின்னர், 172 பயணிகளுடன் வெற்றிகரமாக மலை ரயில் இயக்கப் பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து குன்னூர் வழி யாக உதகைக்கு மலை ரயில் போக்கு வரத்து நூற்றாண்டுகளை கடந்து இயக்கப்பட்டு வருகிறது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் ரயில் என்ஜினும், குன்னூரில் இருந்து உதகைக்கு டீசல் மூலம் இயங்கும் என் ஜின் மூலம் மலை ரயில் இயக்கப் பட்டு வந்தது. இந்நிலையில், குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வடிர பர் னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வந்த ரயில் என்ஜின், அதிகளவில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. எனவே, உச்ச நீதிமன்றம் பர்னஸ் ஆயில் மூலம் மலை ரயில் இயக்கப்படுவதை மாற்றி யமைக்க வேண்டும் என உத்தரவிட் டிருந்தது. இதையடுத்து வனப்பகுதி வழியாக செல்லும் இந்த என்ஜினை பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக, டீசல் என்ஜினாக மாற்றியமைக்கும் பணியை குன்னூர் ரயில்வே பணியா ளர்கள் மேற்கொண்டனர். இந்நிலையில், பர்னஸ் ஆயில் என்ஜின், டீசல் என்ஜினாக மாற்றிய மைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை ஓட்டம் நடைபெற் றது. இதைத்தொடர்ந்து, வியாழ னன்று 172 பயணிகளுடன் மேட்டுப் பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயில் உரிய நேரத்தில் குன் னூரை வந்தடைந்தது. எனவே, வரும் கோடை சீசனில் தடையில்லாமல் மலை ரயிலை இயக்க ரயில்வே துறையினர் முடிவு செய்துள்ளனர்.