பள்ளிபாளையம், ஜன.11- பள்ளிகளில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பரிசுகள் பெறுவதற்காக சென்னை புறப்பட்டு சென்றனர். தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், தமிழ் நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கலை திறனை வளர்க்கும் நோக்கில், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பெண்களுக்கான கலை நிகழ்ச்சியில், குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சியில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றனர். இதே போல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் செங்கல்பட்டில் நடைபெற்ற போட்டி யில் கிராமிய குழு நடன கலை நிகழ்ச்சி போட்டியில் இரண்டாம் பரிசை பெற்றனர். இந்த கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி (இன்று) சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டி கௌரவித்து சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்க உள்ளார். இந்நிலையில், புதனன்று குமாரபாளையம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 9 மாணவர்களும், பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 7 மாணவிகளும் சென்னை புறப்பட்டனர். இவர்களை எஸ்எஸ்எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரவீந்திரன் சென்னை சென்று வருவதற்காக வாகனம் ஏற்பாடு செய்து தந்தார். நகர மன்ற உறுப்பினர் அழகேசன், மாணவர்களுக்கு நிதி உதவி அளித் தார். இம்மாணவர்களை வழியனுப்பும் நிகழ்வில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் அன்பரசு மற்றும் ஆசிரி யர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.