தருமபுரி, ஜன.23- வெண்ணம்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி ைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கி.சாந்தி தெரிவித் துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் ரயில்வே திட்டப்பணிகள் 2010 – 11ன்கீழ் வெண்ணாம்பட்டி சாலையில், ரயில்வே கடவு எண்.41க்கு மாற் றாக, தருமபுரி - சிவாடி ரயில் நிலையங்க ளுக்கு இடையில், பாரதிபுரம் 66 அடி சாலை யில் மேம்பாலம் அமைத்தல் மற்றும் ரயில்வே நடைபாதைச் சுரங்கம் அமைத்தல் பணிக் கான முன்னேற்பாடு பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இப்பணியானது கடந் தாண்டு ஏப்.1 ஆம் தேதியன்று சட்டப்பேர வையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் துறைக்கான மானியக்கோரிக்கையில் அறி விக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நிர்வாக ஒப்புதல் பெற தேவையான கருத்துரு (ரூ.36.15 கோடி) அரசுக்கு அனுப்பப்பட்டுள் ளது. மேற்படி பணிக்கு நிலஎடுப்பு, முன் ஆயத் தப்பணி மற்றும் சேவைச் சாதனங்களை மாற் றியமைத்தல் பணிகளும், நிலஎடுப்பிற்கான இழப்பீடு தொகை நிலஉரிமையாளர்களுக்கு வழங்கும் பணிகளும் தற்பொழுது நடை பெற்று வருகிறது. நிர்வாக ஒப்புதல் பெற்ற வுடன் இப்பணிகள் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள் ளார். முன்னதாக, மேம்பாலம் அமையவுள்ள பகுதியில் ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) பிரபாகரன், உதவி பொறியாளர் கார்த்தி கேயன், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் ஜெயசெல்வம் உள்ளிட்டோர் ஆய்வு மேற் கொண்டனர்.