திருப்பூர், ஜன.12- திருப்பூரில் அரசுப் பள்ளி மற்றும் கல் லூரிகளில் மாணவ மாணவிகள் வெள் ளியன்று கோலாகலமாக சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இன்னும் இரண்டு நாட்களில் பொங் கல் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிக ளுக்கு விடுமுறை விடப்படும் என்ப தால், வெள்ளியன்று திருப்பூர் மாவட் டத்தில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி களில் சமத்துவ பொங்கல் விழா கொண் டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் சிக் கண்ணா கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் மாணவர்கள் ஒருங்கிணைப் பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப் பட்டது. கல்லூரி முதல்வர் வ.கிருஷ் ணன் விழாவை துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும், இவ்விழாவில் பொங்கல் வைத் தல், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உறியடி ஆகிய போட்டிகள் நடைபெற் றது. வெற்றி பெற்றவர்களுக்கு முன் னாள் மாணவர் சங்கத் தலைவர் செல் வராஜ் பரிசுகள் வழங்கினார். அதேபோல காதர்ப்பேட்டை பகுதி யில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியர் கள் மற்றும் ஆசிரியைகள் வழிகாட்டு தலின் பேரில் பள்ளி மாணவர்கள் பொங் கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். திருப்பூர் குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லூ ரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட் டது. அதில் கல்லூரியில் பயிலும் 2000க் கும் மேற்பட்ட மாணவிகள் இணைந்து கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண் டாடி மகிழ்ந்தனர்.