districts

img

பள்ளி வளாகத்தினுள் தெருநாய்கள் மாணவ, மாணவியர் அச்சம்

நாமக்கல், நவ. 11- பள்ளிபாளையம் ஆவரங்காட்டில் உள்ள  அரசு நகராட்சி பள்ளி வளாகத்தினுள் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால், மாணவர்கள் அச் சமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில், நகராட்சி துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க் கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்று முதல் ஐந் தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்ற னர். இந்நிலையில் இந்த பகுதி முழுவதும் தெருநாய்கள் அட்டகாசம் கணிசமாக அதிக ரித்துள்ளது. குறிப்பாக, 15க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஒன்றாக சேர்ந்து பள்ளி வளா கத்திற்குள் நுழைந்து விடுகிறது. இதனால், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் மற்றும்  குழந்தைகள் அச்சப்படுகின்றனர். மேலும், அருகிலேயே இரண்டாயிரத்துக் கும் மேற்பட்ட பெண்கள் கல்வி பயிலும்  மகளிர் பள்ளியும், இருப்பதால் இதுகுறித்து  நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.