நாமக்கல், மார்ச் 26- நாமக்கல் அருகே சாதிய ரீதியாக இழிவாக பேசியதால் அவமானமடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை பல்வேறு அமைப்பி னர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், மோடமங்கலம் அமானி கிராமம், தண்ணீர் பந்தல் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பில் படித்து வந்தவர் ரிதுன் (16). இம்மாணவனை அப்பள்ளியின் ஆசிரியர் சாதிய ரீதியாக இழி வாக பேசி, வெயிலில் நிற்க வைத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் ரிதுன் கடந்த வியாழனன்று ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மாணவனின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் தெய்வாம்பால் மீதும், தலைமையாசிரியர் பங்கஜ வல்லி மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யக்கோரி சனியன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் முற்போக்கு அமைப் பினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் கே.தங்கமணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பி.பெருமாள், எம்.அசோ கன், இந்திய மாணவர் சங்கத் தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், தமிழ் புலிகள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கார்த்திக், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில பொறுப்பாளர் தேவராஜ், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கை சந்தித்து தலைவர்கள் ்கோரிக்கை மனுவினை அளித்த னர். அப்போது, மாணவரின் மரணம் குறித்து உண்மைத் தன்மையினை அறிய வருவாய் கோட்டாட்சியர், திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையிலான குழு அமைத்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமான உறுதியளித்தார். இதனடிப்படை யில் போராட்டம் கைவிடப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டங்கள்
இதற்கிடையே, மாணவரின் மரணத்திற்கு நீதிகேட்டு திருச் செங்கோடு ஆனங்கூர் பேருந்து நிறுத்தம் அருகில் வாலிபர் சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் கோபி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் என்.கண்ணன் உள்ளிட்ட் கலந்து கொண்டனர். இதேபோல், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் லட்சும ணன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மேலும், வெப்படை பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு பஞ்சாலை தொழி லாளர் சங்க மாவட்ட செயலா ளர் எஸ்.தனபால் மற்றும் கட்டுமான சங்க மாவட்ட தலை வர் ராஜேந்திரன் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.