திருப்பூர், ஜூன் 11- திருப்பூர் மாவட்டத்தில், மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவ லர் அவர்களின் வழிகாட்டுதலின் படி உடு மலை கல்வி மாவட்டத்தில் ஊராட்சி நக ராட்சி அரசு பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் சனியன்று காலை அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. 2022 -23 ஆம் கல்வி ஆண் டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் வரும் 13 ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. அதன டிப்படையில் மாணவர்களை அரசு பள்ளி யில் சேர்ப்பதற்காக தீவிர மாணவர் சேர்க்கை வாகனப் பிரச்சாரம் சனியன்று காலை உடுமலை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் துவங்கி, உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிரா மங்களில் பிரச்சாரம் நடைபெற்று வருகி றது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப் போம் மற்றும் அரசின் பல்வேறு நலத் திட் டங்களை விளக்கி கூறி இந்த வாகன பிரச் சாரம் நடைபெற்று வருகிறது. இந்த தீவிர மாணவர் சேர்க்கை வாகன பிரச்சாரத்தை உடுமலைப்பேட்டை வட்டார கல்வி அலுவ லர்கள் ஆறுமுகம், மனோகரன் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் உடுமலை வட் டார ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்ட னர்.