கோவை, செப்.12- குழந்தைகள், பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்முறைகளை தடுக்க கோரி மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், ஆகியோர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் குழந்தை கள், மாணவிகள் மற்றும் பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்முறை களை தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஐசிசி (உள்பு கார்) கமிட்டியை உடனடியாக அமைத்திட வேண்டும். மாணவிகள் புகார் அளிக்கும் போது புகார் மீதான நடவடிக்கை எடுப்பதற்கான விழிப்பு ணர்வை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு வகுப்புகளை அதிக படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்திந் திய ஜனநாயகம் மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் இணைந்து புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறிகையில், கடந்த 2 மாதத்தில் டெல்லி பப்ளிக் ஸ்கூல், சிறுமுகை அரசுப்பள்ளி மாணவிகள், வால்பாறை அரசு கல்லூரி மாணவி கள், கோவை அரசு மருத்துவமனை யில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர், கோவில்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி மாணவியிடம் காவல் அதிகாரி பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்டது, தற்போது தொண்டா முத்தூர் அரசு பள்ளி மாணவிகள் மீது ஈஷா யோகா மையம் இலவச மருத் துவ முகாம் மருத்துவர் நிகழ்த்திய வன்கொடுமைகள் என தொடர்கி றது. எனவே இதை தடுத்து நிறுத்த அனைத்து கல்வி நிலையங்களிலும் ஐசிசி கமிட்டியை அமைக்க வேண்டும். என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ராஜ லக்ஷ்மி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் சுதா போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜுல்ஃபி, வெள்ளிங்கிரி பாதுகாப்பு குழுத் தலைவர் காமராசு ஆகியோர் கண் டன உரையாற்றினார்கள். முடிவில், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிமணி நன்றி கூறினார். இதில், ஏராளமான மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள் ளிட்ட அமைப்பு சார்பில் திரளானோர் கலந்து கொண்டனர்.