districts

img

உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சிறை நிரப்பும் போராட்டம்

தருமபுரி, ஜன.21- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப் படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், என வலியுறுத்தி நடைபெற்ற  சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து  கொண்ட ஏராளமான மாற்றுத்திறனாளி களை காவல் துறையினர் கைது செய்த னர். ஆந்திரா மாநிலத்தில் உள்ளது போல், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை தமிழ்நாடு அரசு  உயர்த்தி வழங்க வேண்டும். மகாத்மா  காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத் தில், 50 சதவிகிதம் (4 மணி நேரம்) பணி  என்ற பழைய நிலையை தொடர வேண் டும். 8 மணி நேரம் பணித்தளத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய உத் தரவை திரும்பப்பெற வேண்டும். அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குடும்ப ரேசன் கார்டுகளை ஏஏஒய் அட்டையாக மாற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா மற்றும் அனைத்து சலுகைகளையும் ஒருங்கிணைத்து ஒரே தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று மாநிலம் தழுவிய சிறை நிரப் பும் போராட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக, தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட ஒன்றியச் செயலாளர் கே. சுசிலா, நிர்வாகிகள் ராமசாமி, ஜெயந்தி,  மாதம்மாள், ஜெயக்கொடி உட்பட நூற்றுக்கணக்கானனோரை காவல் துறையினர் கைது செய்தனர். அரூரில்  மாநில துணைத்தலைவர் தமிழ்செல்வி  தலைமையில் போராட்டம் நடைபெற் றது. இதில் ஒன்றியத் தலைவர் கே. காந்தி, செயலாளர் சபாணா, நிர்வாகி கள் காதர் பாட்சா, சொளகத்அலி, நடுப் பாப்பா உட்பட திரளானோர் கலந்து  கொண்டு கைதாகினர். பாலக்கோட்டில்  நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு வட்டத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பொருளாளர் கிருஷ்ணன், வட்ட நிர்வாகிகள் திம்பன்,  பழனி, விஜயா, நாகராஜன், மாதேஸ்  உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். பென்னாகரத்தில் மாவட் டத் தலைவர் கே.ஜி.கரூரான் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் சின்னமாது,  வட்டத் தலைவர் சமூண்டீஸ்வரி, செய லாளர் சக்திவேல், துணைத்தலைவர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நான்கு மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட மாற் றுத்திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர். ஓமலூரில் நடை பெற்ற போராட்டத்திற்கு மாற்றுத்திற னாளிகள் சங்க இணைச்செயலாளர் அமலாராணி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.குண சேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் செல்வம், தாலுகா தலைவர் சிவா,  நிர்வாகிகள் கோவிந்தன், ஜெகநா தன், ரவி உட்பட பலர் கலந்து கொண்ட னர். மேட்டூரில் மாவட்ட இணைச்செய லாளர் ஜான் பெர்ணாண்டஸ் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் அம்மாசி, நிர்வாகிகள் நடராஜ், நாகேந்திரன் ஆகி யோர் கலந்து கொண்டனர். எடப்பாடி யில் நடைபெற்ற மறியலில், மாவட்டத்  தலைவர் ஹரி கிருஷ்ணன், இணைச் செயலாளர் உமா காந்த் ஆகியோர் பங்கேற்றனர். ஆத்தூரில் மாவட்ட  இணைச்செயலாளர் கந்தன் தலைமை யில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பொருளாளர் கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சக்தி வேல், ராமமூர்த்தி, சுமதி, தாலுகா நிர் வாகிகள் பாரதி, அழகுவேல், சின்ன துரை உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

நாமக்கல்

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முரு கேசன், திருச்செங்கோட்டில் மூத்த தலைவர் எ.ரங்கசாமி ஆகியோர் தலை மையில் மாற்றுத்திறனாளிகள் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  கலந்து கொண்ட நூற்றுக்கணக்கா னோரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் திருப்பூர், உடுமலை, தாராபுரம்  ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளி கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடு பட்டனர். முடிவில் காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து, தனி யார் திருமண மண்டபத்தில் அடைத்த னர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சங்கத்தின் வட்டாரத் தலைவர் ஆனந்தன் தலைமை  வகித்தார். இதில் வட்டாரச் செயலாளர் ராமதாஸ், சிபிஎம் மாவட்டக்குழு உறுப் பினர் விஜயகுமார், நகரச் செயலாளர் வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தாளவாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், வட்டாரச் செயலாளர் ராஜூ, ராயப்பா ஆகியோர் பங்கேற்ற னர். அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம்  முன்பு மாவட்டத் தலைவர் டி.சாவித் திரி, பெருந்துறை வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு மாவட்டப் பொருளாளர் வீ. ராஜு, பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு மாவட்ட உதவிச் செயலாளர் ஆர்.ரமேஷ், பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  மாவட்ட உதவித்தலைவர் சின்னசாமி,  மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு வட்டச் செயலாளர் சொங்கப் பன் ஆகியோர் தலைமையில் மறியல்  நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய் தனர்.

கோவை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி யில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.மகாலிங்கம் தலைமை வகித்தார். பொள்ளாச்சி வட் டத் தலைவர் பாலசுப்பிரமணியம், ஒருங் கிணைப்புக்குழு உறுப்பினர்கள் விஜய ராகவன், இளையராஜா, தாஸ், கனக ராஜ், ரவி மாரியப்பன், சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோக ரன், வி.ஆர்.பழனிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் ஏ.துரைசாமி, தாலுகா செயலாளர் கே.எ.பட்டீஸ்வரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.