districts

img

ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

ஈரோடு, ஜன. 2- ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள ஸ்மார்ட் மீட்டர் திட் டத்தை எதிர்த்து ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் விவசாய சங்கம் சார்பில்  பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், அந்தியூரில் ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக பொதுமக்களிடம் ஆட்சேபணை மனுக்கள் பெறப்பட்டு, மின்வாரிய அலுவலகத்தில் மனுவாக வழங் கப்பட்டது. முன்னதாக, அலுவல கத்தின் முன் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகே சன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், மூலப்பாளையம், கொல்லம்பாளையம், வெண்டி பாளையம் மற்றும் திண்டல் கிளை களின் சார்பில் மின்வாரிய அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டத் தில், கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் சி.முருகேசன், ஜி.பழனிசாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பா.லலிதா உறுப்பினர்  பி.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவை  கோவை மாவட்டம், வெள் ளலூர், காரமடை மற்றும் தொண்டா முத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு  அளிக்கும் போராட்டம் நடைபெற் றது.  இதில், மார்க்சிஸ்ட் கட்சியின்  கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், தாலுகாச் செயலாளர் கே.கனக ராஜ் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தலைவர் வி.பி.இளங்ககோவன், மாவட்ட துணைத்தலைவர் எ.காளப்பன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.