கோவை, ஏப்.7- கோவை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்கு மாருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் வாகன பிரச்சாரம் மற்றும் தெருமுனை வாக்கு சேகரிப்பு கூட்டம் நடை பெற்றது. ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்ட நிர்வாகி யு.கே.சிவஞானம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை மாவட்டச் செயலாளர் ரத்தினகுமார், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அஜய்குமார், தெய் வேந்திரன், பீளமேடு நகரக்குழு உறுப்பினர் எம்.ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இந்தியா கூட்டணி வேட்பா ளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.