கோவை, டிச.16 - கோவை சரவணம்பட்டியில் காணாமல் போன சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலை யில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய் யக்கோரி உறவினர்கள், மார்க்சிஸ்ட் கட்சி, வாலி பர், மாதர், மாணவர் அமைப்பினர் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி (13) ஒருவர் கடந்த 13 ஆம் தேதி தீடீ ரென காணாமல் போன நிலையில் அவரது பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்திருந்தனர். இதனைத்தொ டர்ந்து சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில், சரவணம்பட்டியை அடுத்த யமுனா நகர் பகுதி யில் முட்புதரில் துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம் பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாக்கு மூட்டையில் கை, கால் மற்றும் வாய் கட் டப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் இருந்துள் ளது. இதனை மீட்ட சரவணம்பட்டி காவல்துறை யினர் சிறுமி காணாமல் போனதாக புகார் அளித்த பெற்றோர்களை அழைத்து வந்து உடலை அடை யாளம் கண்டு உறுதிப்படுத்தினர்.
இதனைய டுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சிறுமியின் கை, கால் கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்த நிலையில், அச்சிறுமி கொலை செய்யப்பட்டிக்க லாம் என சந்தேகம் எழுந்தது. ஆகவே, குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களோடு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, செயற் குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சுதா, எஸ். எஸ்.குளம் ஒன்றியக்குழு தலைவர் உஷா, வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாரதி, மாணவர் சங்க நிர்வாகிகள் அசார், தினேஷ் உள்ளிட்டோர் சிறுமியின் உறவினர்க ளோடு இணைந்து அரசு மருத்துவமனை வளா கத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் குற்ற வாளிகளை விரைந்து கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதன்பேரில் மறியல் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யும்வரையில் உடலை பெறமாட்டோம், என தெரிவித்தனர்.