districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மயானம் கேட்டு மக்கள் மனு
சேலம், செப்.4- சேலம், அயோத்தியாபட்டினம் அருகே மயானம் மற்றும் சமுதாயக்கூடம் கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.  சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம், மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட ஐம்பதுக்கு மேற் பட்டோர் திங்களன்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரி வித்திருப்பதாவது, அயோத்தியாபட்டணம் அருகே மேட்டுப் பட்டு பகுதியில் சுமார் ஒன்றை ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இந்த பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகி றோம். பல ஆண்டு காலமாக இந்த பகுதி மக்களுக்கு சமுதாய கூடமும் மயானமும் அமைத்து தர பலமுறை கோரிக்கை  வைத்திருந்தோம். அந்நிலத்தை, எங்கள் பகுதிக்கு நீண்ட நாட் களாக வைத்துள்ள கோரிக்கையான மயானமும், சமுதாய கூடமும் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

கீழ்பவானி வாய்க்காலில் நீர்கசிவு

ஈரோடு, செப்.4- சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற் பட்ட நீர்கசிவு சரிசெய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள உக் கரம் காளிகுளம் பகுதி வழியாக கீழ்பவானி வாய்க்கால் செல் கிறது. இதன் இடது கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லேசாக உடைப்பு ஏற்பட்டிருந்தது. அதன் வழியாக சிறிது சிறிதாக நீர் கசிந்து கொண்டிருந்தது. இந்நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில்  பாசனத்துக்காக விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் கடந்த  மாதம் திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, விநாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டது. இந்நிலையில், காளிகுளம் பகுதியில் உள்ள கிளை  வாய்க்காலில் உடைப்பு பெரிதாகியதால் அதிகளவு நீர்கசிந்து சென்றது. இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத் தப்பட்டது. இதன்பின் பொதுப்பணித்துறை அதிகாரிகள், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். இதன்பின் சிமெண்ட் கலவை மூலம் அடைத்தனர். இதன் மூலம் நீர்கசிவு சரிசெய்யப்பட்டது. எனினும் தொடர்ந்து நீர்கசிவு ஏற்படுகிறதா? என கண்காணிக்கப்பட்டு வாய்க்கா லில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.25 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு

கோவை, செப்.4- கோவையில் உள்ள தனியார் நிறுவனத் தில் ரூ.25 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக மேலாளர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். கோவை, சிங்காநல்லூரை சேர்ந்தவர் குமார் (46). இவர் திருச்சி சாலை, அய்யர் லே-அவுட் அருகே கிரைண்டர் நிறுவனம்  நடத்தி வருகிறார். இங்கு கோவையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மேலாளராகவும், ரம்யா, ஜெயக்குமார், சுப்புலட்சுமி ஆகி யோர் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவர்கள் 4 பேரும் சேர்ந்து  வாடிக்கையாளர்களிடம் வாங்கும் பணத்தை  நிறுவன கணக்கில் சேர்க்காமல், மேலாளர்  சக்திவேல் மனைவி அகிலாண்டேஸ்வரியின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். இது போல் மொத்தம் அவர்கள் 5 பேரும் ரூ.25 லட் சம் மோசடி செய்ததாக தெரிகிறது. இது குறித்து நிறுவன உரிமையாளர் குமார் அவர் களிடம் கேட்டபோது, பணம் கொடுக்காமல் தட்டி கழித்து வந்துள்ளனர். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீ சார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் நிறுவன மேலாளர் சக்திவேல், அவரது மனைவி அகி லாண்டேஸ்வரி, ஊழியர்கள் ரம்யா, ஜெயக் குமார், சுப்புலட்சுமி ஆகிய 5 பேர் மீதும் சிங் காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், குமாரின் தந்தை முத்துசாமி நடத்தி வரும் கிரைண்டர் கம்பெனியிலும் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஏற்கனவே 4 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

காட்டுயானையால் விவசாயிகள் கலக்கம்

உதகை, செப்.4- கூடலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், அங்கிருந்த வாழை மரங் களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவ லையடைந்துள்ளனர். கூடலூர், முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்கு கள் உள்ளன. யானைகள் உணவு தேடி ஊருக்குள் அடிக்கடி புகுந்து வருகிறது. இந்த சமயத்தில் பொதுமக்களின் வீடுகளையும், பயிர்களையும் சேதப்படுத்துகிறது. கூடலூர்  அருகே அள்ளூர் வயல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் உள்ளனர். இவர் கள் வாழை உள்பட பல்வேறு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை வனப்பகு தியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம்  அடிக்கடி அந்த பகுதியில் நுழைகிறது. இந்நி லையில், சனியன்று இரவு காட்டு யானைகள்  ஊருக்குள் புகுந்தது. இதன்பின் அப்பகுதி யில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து அதிகாலை வரை முகாமிட்டு வாழை உள் ளிட்ட பயிர்களை சாய்த்தன. இதில், சில விவ சாயிகள் பராமரித்து வந்த 200க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. இதனால் பொரு ளாதார ரீதியாக மிகுந்த இழப்பிற்கு ஆளாகி  உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறி யுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,  காட்டு யானைகள் அடிக்கடி பயிர்களை சேதப் படுத்தி வருகிறது. தற்போது கூட்டமாக ஊருக்குள் வந்து வாழைகளை சேதப்படுத்தி யுள்ளது. இரவு நேரம் என்பதால் காட்டு யானைகளை விரட்ட முடியாமல் போனது. இவ்வாறு பயிர்களை தொடர்ந்து சேதப்படுத் துவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது, என்றனர்.

கத்தியை காட்டி பணம் பறிப்பு: 2 பேர் கைது

கோவை, செப்.4- திருச்சியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (31). இவர் கோவை, கணபதி பகுதியில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் மணியக்காரன்பா ளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது அங்கு வந்த 2 பேர் அவரை வழிமறித்து பணம் கேட் டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் கள், கத்தி முனையில் மிரட்டி கார்த்திகேயனிடம் இருந்த ரூ.500யை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கார்த்தி கேயன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கத்தி முனையில் பணம் பறித்தது கோவை, நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (20), கோவையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவரான திண் டுக்கல்லைச் சேர்ந்த கவின் ரிஷப் (20) என்பது தெரியவந் தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து,  சிறையில் அடைத்தனர். இதேபோன்று, கோவை சரவணம்பட்டி, விநாயகபுரம், சிவராம் நகரைச் சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேஷ் (26).  இவர் அங்குள்ள விநாயகர் கோயிலில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில், பிரசன்ன வெங்கடேஷ், சிங்காநல்லூர் எஸ்ஐ எச்எஸ் காலனி ரயில்வே பாலம் அருகே நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கும்பல்  அவரை கத்திமுனையில் மிரட்டி அவரிடமிருந்த செல் போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகா ரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

எமரால்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

உதகை, செப்.4- மஞ்சூர் அருகே எமரால்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால், 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித் தது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு அணையிலிருந்து குன்னூர், வெலிங்டன் ராணுவ மையம் ஆகிய இடங்களுக்கு எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சனியன்று எமரால்டு காவல் நிலையம் அருகில் உள்ள எம ரால்டு கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற் பட்டது. இதனால் குழாயிலிருந்து தண்ணீர் 20 அடி உயரத் துக்கு மேல் பீய்ச்சியடித்தது. இதனால் தண்ணீர் வீணானது. இதுகுறித்து தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் கள் விரைந்து வந்து உடைப்பை சரி செய்தனர். அதே இடத்தில் ஞாயிறன்று மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. அப்போது 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. ஒரு மணி நேரம் தண் ணீர் வீணாக சென்றது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலை யில் தண்ணீர் ஆறு போல் ஓடியது. இதன்பின் குடிநீர் விநியோ கம் நிறுத்தப்பட்டு, குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.

பருத்தி ஏலம்

சேலம், செப்.4- எடப்பாடியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,899 முதல் ரூ.7,359 வரை  ஏலம் போனது. மொத்தம் 594 குவிண்டால் எடை கொண்ட 1,674 பருத்தி மூட்டைகள் ரூ.42 லட்சத்து 67 ஆயிரத்து 354 விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

11 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது

திருப்பூர், செப். 4 - திருப்பூர் மாவட்டத்தில் 11  ஆசிரியர்கள் மாநில நல்லாசிரி யர் விருது பெறுகின்றனர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5ஆம் தேதி ஆசிரியர் தின மாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாநில அரசு சிறந்த கல்வித் தொண்டாற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.  அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் மாநில  நல்லாசிரியர் விருதை பெறுகின்றனர். மருதுறை ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.கனக ராஜ், அரண்மனைப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை க.விஜயா, திருப்பூர் பாண்டியன் நகர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜா. ஜோசப், திருப்பூர் காந்திஜிநகர் காலனி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை ரா.சாந்தி, நஞ்சுண்டா புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்  அ.முகைதீன் பாட்ஷா, திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர் அ.ஸ்டெல்லா அமலோற்பவ மேரி, திருப்பூர் அய்யன்காளிபாளையம் வி.கே.அரசு  மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் இரா.ராஜதுரை, திருப்பூர் குமார்நகர் நகரவை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ந.கல்பனா,  காங்கயம் வட்டம் கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெ.சாந்தி அமலோர், திருப்பூர் க.சு.செ.  அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ம.பொன் செல்வி மற்றும் பெருமாநல்லூர் பொங்குபாளையம் சக்தி  விக்னேஷ்வரா கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி ஆ.சக்தி  வேலுச்சாமி ஆகியோர்  தேர்வாகி உள்ளனர். அவர்களுக்கு  பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த சக ஆசிரியர்கள் பலரும்  பாராட்டு தெரிவித்தனர்.

நிலக்கடலைக்கு  பொருளீட்டுக் கடன் பெறலாம்

அவிநாசி, செப்.4- அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூ டத்தில்  நிலக்கடலைக்கு,  பொருளீட்டுக் கடன் பெற  விவசாயி களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண் காணிப்பாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, அவிநாசி வட்டார பகுதியில் சுமார் 3 ஆயி ரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை மானாவாரி சாகுபடி செய் யப்படுகிறது. தற்போது நிலக்கடலை அறுவடை காலம்  தொடங்கி உள்ளதால், விவசாயிகள் சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள ஒரு லட்சம் சதுர அடி  உலர் களத்தை பயன்படுத்தி நிலக்கடலையை இலவசமாக  காயவைத்து விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் அரசால்  அறிவிக்கப்பட்டுள்ள “இ நாம்’ திட்டத்தின் மூலம் மறைமுக  ஏலத்தில் அதிக விலைக்கு நிலக்கடலையை விற்று பயன்பெ றலாம்.  விற்பனைத் தொகையை வங்கிக் கணக்கில் வழங்குவ தால், விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் தங்களு டைய ஆதார் நகல்,  வங்கி புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகி யவற்றை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக  விற்பனைக் கூடத்தில் விளைபொருளை இருப்பு வைத்து,  விவசாயிகள் பொருளீட்டுக் கடன் 5சதவீத வட்டியிலும், வியா பாரிகள் 9சதவீத வட்டிவீதத்திலும் பெற்று பயன்பெறலாம். எனக் குறிப்பிட்டிருந்தார்.

ரூ.1.96 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், செப்.4- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.96  கோடிக்கு பருத்தி ஏலம் நடை பெற்றது. மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. அதிக பட்ச விலையாக குவிண் டால் ஒன்றிற்கு ரூ. 7 ஆயி ரத்து 842 க்கும் குறைந்தபட்ச  விலையாக ரூ.6 ஆயிரத்து  650 க்கும் சராசரி விலையாக  ரூ.7 ஆயிரத்து 350 க்கும் விலை போனது. மொத்தம் 8747 மூட்டைகள் 2 ஆயிரத்து  701 குவிண்டால் பருத்தி ரூ.1  கோடியே 96 லட்சத்து 96 ஆயி ரத்து 97 க்கு விற்பனையா னது. இந்த ஏலத்தில் 21 வணி கர்கள் பங்கேற்றனர். ஏலத் திற்கான ஏற்பாடுகளை கண் காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

“தலித் பெண்ணிடம் தகாத பேச்சு” ஆதிக்க சாதித்திமிரில் நடந்து கொண்டதாக புகார்

ஈரோடு, செப்.4- சாதி ஆணவத்தோடு, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தலித் பெண்ணை வல்லுறவுக்கு அழைத்து அராஜகத்தில் ஈடு பட்டவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது ஈரோடு மாவட்டம், பாசூர் அருகே வேங்கியாம்பாளையத் தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். அருந்ததியரான இவருக்கு திரு மணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்க ளுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். சுந்தராஜனின் மனைவி ஆடுகள் வைத்து மேய்த்து வரு கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல்  ஆடுமேய்த்துக் கொண்டிருந்தவரை அப்பகுதியில் உள்ள சுந்தரேஸ்வரன் என்கிற ஆதிக்கசாதியை சேர்ந்தவர், தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, ஆபாச செய்கை காட்டியுள் ளார். மேலும், உடன்படவில்லை என்றால், இனி இங்கு ஆடு களை மேய்க்கக்கூடாது. மீறி வந்தால் வெட்டி விடுவேன் என்று  மிரட்டியுள்ளார்.  இதுகுறித்த தனது கணவரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்ட சுந்தரராஜன் சுந்தரேஸ்வரனின் அப்பாவிடம் முறை யிட்டுள்ளார். அவர் தனது மகனை கண்டிப்பதாகக் கூறி சுந்தர ராஜனை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார். அதன் பின்னர் சுந்தரராஜனின் வீட்டிற்கு அருகில் காரில் வந்த சுந்த ரேஸ்வரன், ஆபாச வார்த்தைகளில் அவர்களைத் திட்டி மிரட் டியுள்ளார். இச்சம்பவத்தை அங்கே உள்ளவர்கள் செல்போ னில் வீடியோ பதிவும் செய்தனர். மறுநாள் திங்களன்று காலை  10 மணியளவில் மீண்டும் வந்த சுந்தரேஸ்வரன் விறகு கட் டையை எடுத்துக் கொண்டு சாதியைச் சொல்லி திட்டியுள்ளார். தொடர் அச்சுறுத்தலுக்கு ஆளான சுந்தரராஜன் மலையம் பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

பேருந்து ஓட்டுநரின் சாமார்த்தியம்

உதகை, செப்.4- நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு போக்குவரத்து கழக கிளையிலிருந்து திங்களன்று மதியம் 1:30 மணிக்கு, கீழ்குந்தா  கிராமத்திற்கு அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை கீழ் குந்தா கிராமத்தைச் சேர்ந்த சிவா (48) என்பவர் இயக்கினார். குன்னூர் - மஞ்சூர் இடையே 40 பயணிகளுடன் கைக்கட்டி  பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தது. ஓட்டுநர் சோர்வ டைந்த நிலையில், பேருந்தை மெதுவாக இயக்கினர். சுதா ரித்து கொண்ட ஓட்டுநர் சிவா, பேருந்தை சாலையோரம் நிறுத் தினார். உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு சிவா ஓட்டுநர் இருக்கை அருகே சாய்ந்தார். இதையடுத்து பயணிகள் அவரை மீட்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதை உணர்ந்த ஓட்டு நரின் சாமார்த்தியமான செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

வரதட்சனை புகார்: பாமக எம்எல்ஏ-விடம் விசாரணை

சேலம், செப்.5- மருமகள் அளித்த வரதட்சனை புகாரில், மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற உறுப் பினர் சதாசிவம் மற்றும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் மீது மருமகள் வரதட் சனை புகாரளித்தார். அதன்பேரில் சூரமங்க லம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ சார் வரதட்சனை கொடுமை, பெண் வன்கொ டுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசாரின் முதல் கட்ட விசாரணைக்கு ஆஜ ராகாமல் சதாசிவம் குடும்பத்தினர் சென்னை  உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசா ரித்த நீதிபதி, போலீசார் விசாரணைக்கு சதா சிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் செப்.4 ஆம் தேதியன்று சூரமங்கலம் அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும், முன்ஜாமின் மனு மீதான விசார ணையை செப்.7 ஆம் தேதிக்கு ஒத்திவைத் தும் உத்தரவிட்டார். இதையடுத்து திங்க ளன்று பாமக எம்எல்ஏ சதாசிவம், அவரது மனைவி பேபி, மகன் சங்கர், மகள் கலை வாணி ஆகியோர் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா, தனித் தனியே விசாரணை நடத்தினார்.

பள்ளி ஆசிரியை வீட்டில் கொள்ளை

பள்ளி ஆசிரியை வீட்டில் கொள்ளை நாமக்கல், செப்.4- பள்ளிபாளையம் அருகே ஆசிரியை வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள  அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மைனாவதி. இவர்  ஈரோட்டிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மைனாவதி பள்ளிக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார்.. அப்பொழுது வீட்டின்  முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், உள்ளே சென்று  பார்த்தபோது, பீரோவிலிருந்த 10 பவுன் நகை காணாமல்  போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

“பணம் பெற்றுக்கொண்டு பதவி கொடுக்கிறார்”

பாஜக தலைவர் மீது சொந்த கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டு

சேலம், செப்.5- பணத்தை பெற்றுக்கொண்டு பதவி கொடுப்பதாக, சேலம் பாஜக மாவட்ட தலைவர் மீது பாஜக நிர்வாகிகளே குற்றம்சாட்டியுள்ளனர்.  சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் சுரேஷ்பாபு. அவர் மீது தற்போது கட்சி நிர்வாகிகள் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இதுகுறித்து பாஜக முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்கராஜ், முன்னாள் ஓபிசி அணி செயலாளர் கார்த்திக் ஆகியோர் கூறுகையில், பாஜகவின் எந்த கொள்கையும் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு கடைபிடிப்பதில்லை. கட்சி பற்றி அறிமுகம் இல்லாதவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பதவிகள் வழங்குகிறார். மேலும், பெண்கள் விஷயத்திலும் அவர் கண்ணியக்குறைவாக நடந்து கொள்கிறார். இப் பிரச்சினைகள் குறித்து கட்சியின் மாநில தலைமைக்கு ஆதாரத்துடன் புகார் தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தனர். சொந்த கட்சியின் மாவட்டத் தலைவர் மீதே தனது கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது அரசியல் வட்டாராத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.  ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவர் மீது அக்கட்சியின் பெண்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வெளிப்படையாக போராட்டம் நடத்திய நிலையில் தற்போது சேலத்திலும் இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது, பாஜகவின் உண்மை முகம் அம்பலப்பட்டு வருகிறது.

இன்று மின்தடை

தருமபுரி, செப்.4- தருமபுரி, பைசுஅள்ளி, சோலை கொட்டாய் துணை மின் நிலையங்களில் செவ் வாயன்று (இன்று) மாதாந் திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன. இதனால் தரு மபுரி பேருந்து நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டி அள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டி அள்ளி, விருபாட்சிபுரம், மதி கோன்பாளையம்,  நெசவாளர் காலனி, அம்பேத்கர் காலனி,  நேதாஜி நெடுஞ்சாலை, ராஜா பேட்டை, சோலை கொட்டாய், நூலஅள்ளி, கட கத்தூர், பழைய தருமபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட் டிபட்டி, காளப்பன அள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக் காது.