districts

img

12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற விளையாட்டு தினம்

நாமக்கல், ஜன.13- திருச்செங்கோடு அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டு தினம் கொண்டாடி யதால் மாணவிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் அமைந்துள் ளது. இப்பள்ளிக்கு மைதானம் இல்லா ததால், கடந்த 12 ஆண்டுகளாக விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்படா மல் விளையாட்டு தினம் கொண்டாடப் படாமல் இருந்தது. இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத் தப்பட்டன. 100 மீட்டர் ஓட்டம், தடை ஓட் டம், 400 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட் டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங் கப்பட்டன. இப்போட்டிகளை திருச்செங் கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்  தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஆண்கள் மேல்நி லைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக  தலைவர் பரந்தாமன், நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரி என பலர் கலந்து கொண்டனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகள் நடந்ததால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.