சென்னை, ஜூன் 17- தேசிய கல்விக்கொள்கை (என்இபி) மக்களுக்கு விரோதமானது என்றும், அரசி யலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள உறுதிக்கு முரணானது என் றும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. கோபால கவுடா கூறினார். சென்னையில் “ இந்திய அரசியலமைப் பின் நெறிமுறைகள், கலாச்சார விழுமியங் கள், முகப்புரை மற்றும் வழிகாட்டுதல் கோட் பாடுகள்,” என்ற தலைப்பில் பொதுப்பள்ளிக் கான மாநில மேடை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய அவர் இந்த கல்விக் கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஆத ரிப்பதாக கூறினார். “என்இபி மாநில சட்ட மன்றங்களின் அதிகாரங்களை ஆக்கிரமிக் கிறதா என்பதை நாம் ஆய்வு செய்ய வேண் டும். அவ்வாறு செய்தால், இந்த கல்விக்கொள் கையை அமல்படுத்துமாறு ஒன்றிய அரசு மாநில அரசுகளைக் எப்படி கேட்க முடி யுமா? இது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களால் மிகவும் ஆழமாக பரிசீ லிக்கப்பட வேண்டிய விஷயம். இந்தியா ஒரு ஜனநாயக குடியரசு என்பதை கருத் தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட் டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை எடுத்து ரைத்த அவர், “ஒவ்வொரு மாநிலமும் சுதந் திரமானது மற்றும் அரசியலமைப்பின் ஏழா வது அட்டவணையில் பட்டியல் இரண்டு மற்றும் பட்டியல் 3 இன் கீழ் சட்டங்களை இயற்றுவதற்கு அரசியலமைப்பின் 246 வது பிரிவின் கீழ் மாநில சட்டமன்றங்க ளுக்கு அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றத் திற்கு இயற்ற அதிகாரம் உள்ளது.இதில் நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு அதிகார வரம்பை மீறினால், அரசியலமைப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி, அந்தச் சட்டத்தை மாநில அரசுகள் புறக்கணிக்க வேண்டும். எந்த ஒரு சட்டமும் மாநில அரசு களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்று தான் அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
என்இபி-யில் சமஸ்கிருத மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த கல்விக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் நீங்கள் கற்க வேண்டிய ஒரு மொழியை திணிக்க முயற்சித்தால், நீங்கள் அனைத்து குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்க முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தியா பன்முக கலாச்சாரம், பன்முகத்தன்மை கொண் டது. மொழிகளும் மதங்களும் அரசியல மைப்பின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். “அடிப்படை உரிமைகள் மற்றும் சமத்து வத்திற்கு எதிரான என்இபி- க்கு மாநில அரசு கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதன் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது மற்ற மாநிலங்க ளுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்புகி றேன். மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரசியலமைப்பு விரோதக் கொள்கை களை எதிர்க்கும் அளவுக்கு நாட்டு மக்கள் துணிச்சலை பெற்றுள்ளனர் என்றும் நீதி பதி கவுடா கூறினார். நிகழ்ச்சியில், விசிக தலைவரும், எம்.பி. யுமான தொல்.திருமாவளவன் பேசுகை யில், “சமத்துவமின்மை என்பது சனாதன தர்மத்தின் ஆவியாகும், அதே சமயம், நவீன இந்தியாவின் அரசியல் சாசனம், சமத்து வம், சகோதரத்துவத்தை ஊக்குவிக்கிறது. சனாதன இந்தியா தான், அரசியலமைப் புச் சட்டத்தின் மூலம் ஜனநாயக இந்தியா வாக மாற்றப்பட்டது, என்றார்.