சேலம், மே 24- கோடை வெயிலால் குழந்தைக ளுக்கு தோல் நோய் பாதிப்புகள் அதி களவில் வருவதற்கு வாய்ப்புள்ள தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர். சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரு கிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. அதேபோல், மாலை நேரங் களில் மழையும் பெய்து வருகிறது. கடந்த மே 4 ஆம் தேதியன்று முதல் அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித் துள்ளது. கோடை விடுமுறையில் உள்ள குழந்தைகள் வீட்டிற்கு வெளியே மற்றும் உள்ளே விளையாடும்போது வெயிலின் உக்கிரத்தால், அவர்க ளுக்கு தோல் நோய் ஏற்படுகிறது. வேர்க்குரு உள்ளிட்ட தோல் நோய் அதிவேகமாக தாக்கி வருகிறது. இத னால், குழந்தைகள் மிகுந்த எச்ச ரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறு கையில், ‘கடந்த சில நாட்களாக அக்னி வெயிலின் தாக்கம் அதிக ரித்துக் கொண்டே செல்கிறது. இத னால் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது. அவர்களுக்கு தோல் நோய் சார்ந்த பாதிப்புகள் அதிகளவில் வர வாய்ப்புள்ளது. இளநீர், நுங்கு, மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழ வகைகள், நீராகரங்கள் போன்ற இயற்கை உணவுகளை அதிகமாக கொடுக்க வேண்டும். குறிப்பாக பாட் டில்களில் அடைத்து வைக்கப்பட் டுள்ள குளிர்பானங்களை கொடுப் பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிக வேர்குரு பாதிப்பு, தோல் நோய் ஏற்பட்டால் உடடினயாக மருத் துவர்களை அணுக வேண்டும், என் றனர்.